போதைப் பொருள் மற்றும் செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வலியுறுத்தி அங்கலக்குறிச்சியில் மாரத்தான் போட்டி

10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மூன்று கிலோ மீட்டர் தூரமும், 13 முதல் 15 வயது மாணவ, மாணவிகளுக்கு நான்கு கிலோமீட்டர் தூரமும், 16 முதல் 18 வயது மாணவ, மாணவிகளுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு மூன்று பிரிவுகளாக மாரத்தான் போட்டி நடைபெற்றது.


கோவை: பொள்ளாச்சி அருகே அங்கலக்குறிச்சியில் செயல்பட்டு வரும் விக்னேஸ்வரா தனியார் மேல்நிலைப்பள்ளி சார்பில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைப் பொருள் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், செல்போன் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும், அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் வேற்றுமையின்றி ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி மாரத்தான் போட்டி நடைபெற்றது.



போட்டியை ஆனைமலை காவல் ஆய்வாளர் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மூன்று கிலோ மீட்டர் தூரமும், 13 முதல் 15 வயது மாணவ, மாணவிகளுக்கு நான்கு கிலோமீட்டர் தூரமும், 16 முதல் 18 வயது மாணவ மாணவிகளுக்கு 5 கிலோ மீட்டர் தூரமும் நிர்ணயிக்கப்பட்டு மூன்று பிரிவுகளாக நடைபெற்ற இந்த போட்டியில் வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு வெற்றிக் கோப்பைகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.



இன்றைய காலகட்டத்தில் போதை பழக்கபழக்கத்திற்கு அடிமையாகி தங்களது வாழ்வை சீரழித்து வருகின்றனர். போதை பழக்கத்திலிருந்து மாணவர்கள் மீள வேண்டும், மாணவ மாணவிகள் செல்போனில் மூழ்கிக் கிடப்பதால் ஞாபகத்திறன் குறைந்து வருகிறது. சமூக வலைதளங்களில் தவறாக வரும் பதிவுகளை பார்ப்பதனால் தவறான பாதைக்கு செல்ல நேரிடுகிறது. இதை மாணவ மாணவிகள் தவிர்க்க வேண்டும் என்று மாணவிகள் வேண்டுகோள் விடுத்தனர்.

Newsletter

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...

பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயிலில் வெயிலில் இருந்து பக்தர்களை பாதுகாக்க சிறப்பு ஏற்பாடு

கோவை மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில், பேரூர் பட்டீஸ்வரர், கோனியம்மன், மருதமலை முருகன் கோயில்கள் உள்...

மே தினத்தன்று கோவையில் அனைத்து மதுக்கடைகளும் மூடல்: மாவட்ட ஆட்சியர் உத்தரவு

மே 1ஆம் தேதி தொழிலாளர் தினத்தை மதுவிலக்கு நாளாக அறிவித்து கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மதுக்கடைகள், பார்கள், நட்ச...

தொண்டாமுத்தூர் பாக்கு தோட்டத்தில் மாயமான காட்டெருமை: வனத்துறையினர் தீவிர தேடுதல்

கோவை கெம்பனூர் பகுதியில் 6 மாதங்களாக சுற்றித்திரிந்த காட்டெருமை, தொண்டாமுத்தூர்-மாதம்பட்டி சாலையில் உள்ள பாக்கு தோட்டத்த...

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு 35-வது வெடிகுண்டு மிரட்டல்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு இன்று காலை இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது. வெடிகுண்டு கண்டறியும் குழுவினர...

கோவை அரசு மருத்துவமனையில் ஹீட் ஸ்ட்ரோக் சிகிச்சைக்கு சிறப்பு பிரிவு

கோவையில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் எட்டியதால், ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவமனையி...