31வது பெடரேசன் கூடைப்பந்து கோப்பை: இறுதி போட்டியில் பெண்கள் பிரிவில் சத்தீஸ்கர் அணியும் ஆண்கள் பிரிவில் ஓஎன்ஜிசி அணியும் வெற்றி.

31வது பெடரேசன் கோப்பைக்கான தேசிய சாம்பியன் கூடைப்பந்து இறுதி போட்டியில் ஆண்கள் பிரிவில் ஓஎன்ஜிசி அணியும் பெண்கள் பிரிவில் சத்தீஸ்கர் அணி வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றின.

31வது தேசிய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகள் பங்கேற்ற தேசிய சாம்பியன் கூடைப்பந்து போட்டிகள் கோவை பி.எஸ்.ஜி. உள்விளையாட்டு அரங்கில் கடந்த 22 – ம் தேதி முதல் நடைபெற்று வந்தது. இறுதி  போட்டியில் பெண்கள் பிரிவில் சத்தீஸ்கர் அணியும் ஆண்கள் பிரிவில் ஓஎன்ஜிசி அணியும் வெற்றி பெற்று கோப்பையை கைபபற்றினர். 



பெண்கள் இறுதி சுற்றுப் பிரிவில் சத்தீஸ்கர் அணியும் தென்னக இரயில்வே அணியை எதிர்த்து விளையாடிது. இதில் சத்தீஸ்கர் அணி 77 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இதன் வீராங்கனைகள் பூனம் சதுர்வேதி 28 புள்ளிகளும், சரன்ஜித் கவுர் 27 புள்ளிகளும் எடுத்தனர்.எதிர்த்து விளையாடிய தென்னக இரயில்வே அணி 67 புள்ளிகள் பெற்றது. இதன் வீராங்கனைகள் பி.அனிதா 23 புள்ளிகளும், எஸ்.நீனா 17 புள்ளிகளும் பெற்றனர்.  


ஆண்கள் இறுதி சுற்று போட்டியில் ஓஎன்ஜிசி அணியை எதிர்த்து இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி விளையாடியது. இதில் ஓஎன்ஜிசி அணி 55 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இதன் வீரர்கள் அம்ரித்பால் சிங் 17 புள்ளிகளும், விசேஷ் பிரிகுவான்சி 17 புள்ளிகளும் பெற்றனர். எதிர்த்து விளையாடிய இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணி 52 புள்ளிகள் பெற்று 2ம் இடத்தை பிடித்தது.இதன் வீரர்கள் பிரசன்னா வெங்கடேஷ் 14 புள்ளிகளும்,பிரதம் சிங் 13 புள்ளிகளும் எடுத்தனர்.  


முன்னதாக இன்று காலை நடைபெற்ற மூன்று மற்றும் நான்காவது இடங்களுக்கான போட்டிகளில் பெண்கள் அணியில் மேற்கு வங்க அணியை எதிர்த்து தமிழ்நாடு அணி விளையாடியது. இதில் மேற்கு வங்க அணி 81 புள்ளிகள் பெற்று வெற்றி பெற்றது. இதன் வீராங்களைகள் சல்மா தேவி 22 புள்ளிகளும் மது குமாரி 20 புள்ளிகளும் எடுத்தனர்.எதிர்த்து விளையாடிய தமிழ்நாடு அணி 52 புள்ளிகள் பெற்றது. இதன் வீராங்கனைகள் வர்ஷநந்தினி 13 புள்ளிகளும் ஸ்ரீவித்யா சேகர் 12 புள்ளிகளும் பெற்றனர். 


தொடர்ந்து நடைபெற்ற ஆண்கள் அணியில் இந்தியன் ஏர்போர்ஸ் அணியை எதிர்த்து ஆர்மி சர்வீசஸ் கார்ப்ஸ் அண்டு சென்டர் அணி விளையாடியது. இதில் இந்தியன் ஏர்போர்ஸ் அணி 85 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. இதன் வீரர்கள் ஜோகிந்தர் சிங் 33 புள்ளிகளும், நரேந்தர் 30 புள்ளிகளும் எடுத்தனர். எதிர்த்து விளையாடிய ஆர்மி சர்வீசஸ் கார்ப்ஸ் அண்டு சென்டர் அணி 79 புள்ளிகள் பெற்றனர்.இறுதிப் போட்டியை தொடர்ந்து நடைபெற்ற பரிசளிப்பு விழா நிகழ்ச்சியில் வருமான வரி துறை ஆணையாளர் பி.செல்வகனேஷ், சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற ஓஎன்ஜிசி அணி மற்றும் சத்தீஸ்கர் அணிக்கு வெற்றி கோப்பையை பரிசாக வழங்கினார். 



மேலும் விழாவில்  அரைஸ் பவுண்டேசன், நிறுவனர் மற்றும் 31வது பெடரேசன் கோப்பை தேசிய கூடைப்பந்து சேம்பியன்சிப் போட்டி ஏற்பாட்டு தலைவருமான ஆதவ் அர்ஜுன், இந்திய கூடைப்பந்து கழக பொது செயலாளர் சந்தர் முகி சர்மா, தமிழ்நாடு கூடைப்பந்து கழக தலைவரும் 31வது பெடரேசன் கோப்பை தேசிய கூடைப்பந்து சேம்பியன்சிப் போட்டி ஏற்பாட்டு தலைவருமான  ராஜ் சத்யன், மற்றும் தமிழ்நாடு கூடைப்பந்து கழக முதுநிலை துணைத் தலைவர் செந்தில் தியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இறுதி போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடம் பிடித்த ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளுக்கு பரிசாக ரூ. 1 லட்சம் மற்றும் கோப்பையும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.75 ஆயிரம், மூன்றாமிடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.50 ஆயிரம் மற்றும் நான்காமிடம் பிடிக்கும் அணிக்கு பரிசாக ரூ.25 ஆயிரம் வழங்கபட்டது.

Newsletter

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...

SSLC தேர்வு முடிவுகள் 2026: கொங்கு மண்டலத்தில் 97.09 சதவீதம் தேர்ச்சி விகிதத்துடன் கோவை முதலிடம்..!

தமிழகத்தில் நடைபெற்ற 2026 எஸ்.எஸ்.எல்.சி பொதுத்தேர்வு முடிவுகளில் புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்கள் மாந...

கோவையில் 1,500-க்கும் மேற்பட்ட மருந்தகங்கள் அடைப்பு; பொதுமக்கள் அவதி..!

ஆன்லைன் மருந்து விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும், கார்ப்பரேட் நிறுவனங்களின் தள்ளுபடி விற்பனையை கட்டுப்படுத்த வேண்டும் உள...