பொகலூரில் களப்பணியாளர்களுக்கான பாராட்டு விழாவில் கண் கண்ணாடிகளை வழங்கிய கோவை ஆட்சியர் கிராந்திகுமார் பாடி

நமது கிராமம் கண் குறைபாடு இல்லாத கிராமம் திட்டத்தின் களப்பணியாளர்களுக்கான பாராட்டு விழா இன்று (பிப்.14) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார்.


கோவை: கோயம்புத்தூர் மாவட்டம் பொகலூர் தாழத்துறை ஸ்ரீ சக்தி மினி ஹாலில் நமது கிராமம் கண் குறைபாடு இல்லாத கிராமம் திட்டத்தின் களப்பணியாளர்களுக்கான பாராட்டு விழா இன்று (பிப்.14) நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கண் கண்ணாடிகளை வழங்கினார்.



உடன் சங்கரா கண் மருத்துவமனை நிறுவனர் பத்மஸ்ரீ டாக்டர்.ஆர்.வீரமணி, சங்கரா கண் மருத்துவமனையின் தலைவர் டாக்டர்.எஸ்வி.பாலசுப்பிரமணியம், டைட்டன் நிறுவன மேலான் இயக்குனர் சி.கே.வெங்கட்ராமன் ஆகியோர் இருந்தனர்.

இதனிடையே, அன்னூர் வட்டம், பசூர் ஊராட்சியில் (பிப்.14) மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது. இதில், பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றனர்.

தொடர்ந்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார். இதில், மாவட்ட கவுன்சிலர் ஆனந்தன், அரசுத் துறை அதிகாரிகள் பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...