நிர்வாக திறமையின்மையை மறைக்க மத்திய அரசு மீது தமிழக அரசு பழி சுமத்துகிறது -பொள்ளாச்சியில் வானதி சீனிவாசன் பேட்டி

விவசாயிகள், பெண்கள் உட்பட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. அது குறித்து ஏன் தமிழக அரசு பேசுவதில்லை. மத்திய அரசு மாநில அரசுக்கு எவ்வளவு நிதி ஒதுக்குகிறது என்று அறிக்கை வெளியிட தயாரா என சட்டமன்ற உறுப்பினர் கேள்வி எழுப்பினார்.


கோவை: பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதி பாஜக மகளிர் அணி மாநாடு பொள்ளாச்சி கோவை சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இன்று நடைபெற்றது. தேசிய மகளிர் அணி தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த ஏராளமான மகளிர் அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.



கூட்டத்திற்கு பின்னர் வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது., மாநில அரசுக்கு நிதி ஒதுக்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுகிறது என கூறி வருகின்றனர். நிதி கமிஷன் என்ன வருவாய் அளவு வைத்திருக்கின்றனர். குறிப்பிட்ட வருவாயில் மத்திய அரசுக்கு மாநில அரசுக்கு என அளவீடு உள்ளது. தமிழகத்தில் இருந்து கிடைக்கக்கூடிய வருவாயில் எவ்வளவு வழங்கப்படுகிறது. அதை முறையாக வழங்கி வருகின்றனர். மத்திய அரசு தமிழகத்திற்கு நேரடியாக செயல்படுத்துகின்ற பல்வேறு திட்டங்கள் உள்ளன. இந்த திட்டங்கள் குறித்து தமிழக அரசு கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. விவசாயிகளுக்கு, பெண்களுக்கு உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு மத்திய அரசு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்குகிறது. அது குறித்து ஏன் தமிழக அரசு பேசுவதில்லை. மத்திய அரசு மாநில அரசுக்கு எவ்வளவு நிதி ஒதுக்குகிறது என்று அறிக்கை வெளியிட தயாரா என கேள்வி எழுப்பினார். இவர்களின் நிர்வாக திறமையின்மையை மறைக்க மத்திய அரசு மீது பழி சுமத்துவதாக வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...