கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் ABC மைய கட்டுமானப் பணி தொடக்கம்

தெற்கு மண்டலம் வார்டு எண்.97-க்குட்பட்ட ஈச்சனாரி ஐயப்பா நகரில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பொது கழிப்பிடத்தினை மேயர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தனர்.


கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சி தெற்கு மண்டலம் வெள்ளலூர் உரக்கிடங்கு பகுதியில் உங்கள் தொகுதியில் முதல்வர் 2023-24 திட்டத்தில், மாநகராட்சி பொதுநிதியின்கீழ் ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் ABC மையம் கட்டுவதற்கான கட்டுமானப் பணியினை மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுரு பிரபாகரன், ஆகியோர் இன்று (09.03.2024) தொடங்கி வைத்தனர்.

கோயம்புத்தூர் மாநகராட்சி, தெற்கு மண்டலம் வார்டு எண்.99-க்குட்பட்ட வெள்ளலூர் உரக்கிடங்கு பகுதியில் உங்கள் தொகுதியில் முதல்வர் 2023-24 திட்டத்தில், மாநகராட்சி பொதுநிதியின்கீழ் ரூ.65.00 இலட்சம் மதிப்பீட்டில் ABC மையம் கட்டுமானப் பணியினை மேயர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் தொடங்கி வைத்து, கட்டுமானப் பணியினை விரைவாக முடித்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.



முன்னதாக, மேயர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் தெற்கு மண்டலம் வார்டு எண்.97-க்குட்பட்ட ஈச்சனாரி ஐயப்பா நகரில் நமக்கு நாமே திட்டத்தின்கீழ் ரூ.25.00 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட பொது கழிப்பிடத்தினையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்கள்.



இந்த நிகழ்வின்போது, துணை மேயர் ரா.வெற்றிசெல்வன், ஆளுங்கட்சித்தலைவர் கார்த்திகேயன், மாமன்ற உறுப்பினர்கள் அஸ்லாம்பாஷா, குணசேகரன், உதவி செயற்பொறியாளர் கனகராஜ், உதவி பொறியாளர்கள் சரண்யா, சபரிராஜ், தன்னார்வலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உட்பட பலர் உடனிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...