உடுமலையில் சிறப்பு மக்கள் நீதிமன்றம் - 238 வழக்குகளுக்கு தீர்வு

தண்டனைக்குரிய சிறு வழக்கு 149 ல் 149 வழக்குகள் ரூ.2 லட்சத்து 29 ஆயிரத்து 400 க்கும், காசோலை மோசடி வழக்கு 6 ல் 2 வழக்குகள் ரூ. 9 லட்சத்து 50 ஆயிரத்திற்கும், வங்கி வராக்கடன் வழக்கு 600 ல் 18 வழக்குகள் ரூ. 15 லட்சத்து 60 ஆயிரத்து 500 க்கும் ஆகிய வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட கச்சேரி வீதியில் சார்பு நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த வளாகத்தில் சார்பு மற்றும் உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண்.2 செயல்பட்டு வருகிறது. அத்துடன் தாலுக்கா அலுவலக வளாகத்தில் குற்றவியல் நீதிமன்றம் நடுவர் எண்.1, மடத்துக்குளம் தாலுகா அலுவலகத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் செயல்பட்டு வருகிறது.

இந்த நீதிமன்றங்களில் வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் தேசிய மக்கள் நீதிமன்றம் (நேசனல் லோக் அதாலத்) நடைபெற்றது. 3 அமர்வுகளாக நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு உடுமலை வட்ட சட்டப் பணிகள் குழுத் தலைவரும் சார்பு நீதிபதியுமான எம்.மணிகண்டன் தலைமை வகித்தார். அதைத் தொடர்ந்து மாவட்ட உரிமையியல் நீதிபதி வி.எஸ்.பாலமுருகன், மடத்துக்குளம் உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் கே.விஜயகுமார், உடுமலை ஜே.எம்.2 மாஜிஸ்திரேட் ஆர்.மீனாட்சி ஆகியோர் முன்னிலையில் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.



அதன்படி தண்டனைக்குரிய சிறு வழக்கு 149 ல் 149 வழக்குகள் ரூ.2 லட்சத்து 29 ஆயிரத்து 400 க்கும், காசோலை மோசடி வழக்கு 6 ல் 2 வழக்குகள் ரூ. 9 லட்சத்து 50 ஆயிரத்திற்கும், வங்கி வராக்கடன் வழக்கு 600 ல் 18 வழக்குகள் ரூ. 15 லட்சத்து 60 ஆயிரத்து 500 க்கும், மோட்டார் வாகன விபத்து வழக்கு 57 ல் 57 வழக்குகள் ரூ. 3 கோடியே 60 லட்சத்து 22 ஆயிரத்திற்கும், இதர சிவில் வழக்கு 25 ல் 11 வழக்குகள் ரூ.3 கோடியே 57 லட்சத்து 79 ஆயிரத்து 884 க்கும், ஜீவனாம்ச வழக்கு 3 ல் ஒரு வழக்கு ரூ.20 ஆயிரத்திற்கும் ஆக மொத்தம் 840 வழக்குகள் எடுக்கப்பட்டு 238 வழக்குகளுக்கு ரூ.7 கோடியே 45 லட்சத்து 61 ஆயிரத்து 784 க்கு தீர்வு காணப்பட்டது.

இதில் அரசு வக்கீல்கள் சேதுராமன், ரவிச்சந்திரன், வக்கீல் சங்க தலைவர் மனோகரன், செயலாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட இன்சுரன்ஸ் கம்பெனி மற்றும் வங்கி அதிகாரிகள், மூத்த மற்றும் இளம் வக்கீல்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...