கோவையில் கிறிஸ்துவர்களுக்கு புனித வாரத்தை தொடங்கி வைத்த குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

கோவை காந்திபுரம் சி எஸ் ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் முன்பாக நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு ஊர்வலத்தின் மூலம், இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவுகூறும் புனித வாரம் தொடங்கியது.



Coimbatore: இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்ப்பு ஆகியவற்றை நினைவுகூறும் புனித வாரத்தின் தொடக்கமாக, மார்ச் 24 ஆம் தேதி கோவையில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடைபெற்றது. பிப்ரவரி 14 தொடங்கிய 40 நாட்கள் தவக்காலத்தின் முடிவில் புனித வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

காந்திபுரம் சி எஸ் ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் முன்பாக துவங்கிய இந்த ஊர்வலத்தில் ஆயர் தலைவர் டேவிட் பர்னபாஸ், செயலாளர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ரவி இன்பசிங், உதவி ஆயர் சாம் ஜெபசுந்தர், சபை ஊழியர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



குருத்தோலைகளை ஏந்திக்கொண்டு "ஓசன்னா ஓசன்னா" என்று பாடியபடி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் சேர்ந்து ஊர்வலமாக சென்றனர். ஐந்தாவது வீதி மற்றும் முக்கிய வீதி வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்த இந்த ஊர்வலம், புனித வாரத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.

ஊர்வலம் முடிந்து ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. வருகிற மார்ச் 29 ஆம் தேதி புனித வெள்ளி மற்றும் மார்ச் 31 ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை அனுசரிக்கப்படுவதால், இந்த நாட்களில் இயேசு உயிர்த்தெழுந்ததை கொண்டாட கிறிஸ்தவ சமூகம் தயாராகிறது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...