பொள்ளாச்சியில் ரூ. 25 ஆயிரம் டெபாசிட் பணத்தை 10 ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்து வேட்பு மனு தாக்கல்..!

10 ரூபாய் நாணயத்தை கடைகள், ஒரு சில அரசு அலுவலகங்களில் வாங்குவது கிடையாது என்பதால் வாங்க வேண்டுமென வலியுறுத்தி பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பெஞ்சமின் கிருபாகரன் நூதன முறையில் வேட்பு மனு தாக்கல்.


கோவை: வரும் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ள மக்களவை தொகுதி தேர்தலில் பகுஜன் சமாஜ் கட்சி தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் தனித்துப் போட்டியிடப்படுகிறது. இதில் பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியின் வேட்பாளராக உடுமலையைச் சேர்ந்த பெஞ்சமின் கிருபாகரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.



இந்நிலையில், இன்று பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் பெஞ்சமின் கிருபாகரன் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி கேத்தரின் சரண்யாவிடம் வேட்பு மனுவை அளித்து உறுதிமொழி ஏற்றுக்கொண்டார்.

மேலும், வேட்பு மனு தாக்கலுக்கு உண்டான டெபாசிட் பணத்தை செலுத்துவதற்காக 25 ஆயிரம் ரூபாய்க்கு பத்து ரூபாய் நாணயங்களை டெபாசிட் பணமாக செலுத்தினார்.

இதுகுறித்து வேட்பாளர் கூறுகையில், பத்து ரூபாய் நாணயத்தை கடைகளில் மற்றும் ஒரு சில அரசு அலுவலகங்களிலும் வாங்குவது கிடையாது. இதனால் பத்து ரூபாய் நாணயங்கள் அனைத்து கடைகளிலும் வாங்க வேண்டும் என்று வலியுறுத்தும் வகையில் நூதன முறையில் மனு தாக்கல் செய்ததாக தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் டாஸ்மாக் பார் அருகே டிரான்ஸ்பார்மர் வெடித்ததில் 3 பேருக்கு தீக்காயம்

கோவை கண்ணப்பநகரில் டாஸ்மாக் பார் அருகே இருந்த டிரான்ஸ்பார்மர் திடீரென வெடித்து தீப்பற்றிய விபத்தில், மூவருக்கு தீக்காயம்...

வாக்கு எண்ணிக்கை மையத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் - கட்சியினருக்கு கோவை ஆட்சியர் எடுத்துரைப்பு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்கு எண்ணிக்கை நாளில் வேட்பாளர்கள் மற்றும் முகவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குற...

போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளை தவிர்த்து சிங்கப்பூர், மலேசியாவுக்கு படையெடுக்கும் கோவை மக்கள்

கோடைகால விடுமுறையையொட்டி கோவை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ஈரான்-இஸ்ரேல் போர் பதற்...

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...