விருகல்பட்டி கூட்டுறவு வங்கியில் முறைகேடு – நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிக்கபோவதாக விவசாயிகள் அறிவிப்பு

தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விருகல்பட்டி ஊராட்சியில் கருப்பு கொடி ஏற்றி, தேர்தலை புறக்கணிக்க போவதாக விவசாயிகள் தெரிவித்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே விருகல்பட்டி ஊராட்சியில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் முறைகேட்டில் ஈடுபட்ட தலைவர், இயக்குனர்கள், செயலர் உதவி செயலாளர் ஆகியோர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு விருகல்பட்டி மற்றும் ராமச்சந்திராபுரம் உட்பட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் தொடக்க வேளாண்மை அலுவலகத்தை முற்றுகையிட்டு காத்திருப்புப் போராட்டம், ஆடு மாடுகளுடன் போராட்டம், சாலை மறியல் என பல்வேறு கட்ட போராட்டங்கள் செய்தும் தற்பொழுது வரை எந்த நடவடிக்கையும் தமிழக அரசு எடுக்கப்படவில்லை.



இதனால் தமிழக அரசை கண்டித்தும், மறு பயிர் கடன் வழங்காத்தை கண்டித்தும், முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் விருகல்பட்டி ஊராட்சியில் கருப்பு கொடி ஏற்றினர். பின்னர் தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் தெரிவித்தனர். அப்போது தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் இடப்பட்டன.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...