திமுக வேட்பாளர் பிரகாஷை ஆதரித்து தாராபுரம் மூன்றாவது வார்டு பகுதியில் அமைச்சர் கயல்விழி பிரச்சாரம்

வணிகர்கள், தையல் தொழிலாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பு மக்களை வீடு வீடாக சென்று சந்தித்து திமுகவின் தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி அமைச்சர் கயல்விழி வாக்கு சேகரித்தார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகரம் 3 ஆம் வார்டு பகுதிகளில் ஈரோடு நாடாளுமன்ற திமுக வேட்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்கு கேட்டு ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் வணிகர்கள், தையல் தொழிலாளர்கள், பொதுமக்கள் என பல்வேறு தரப்பு மக்களை வீடு வீடாக நடந்து சென்று திமுகவின் தேர்தல் அறிக்கை அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடும் ஈரோடு நாடாளுமன்ற வேட்பாளர் பிரகாஷ் அவர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.



அப்போது தப்பாட்டம், ஒயிலாட்டம், நாட்டுப்புற பாடல் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் திமுகவின் மூன்று ஆண்டு சாதனைகளை எடுத்துக் கூறியும், பெட்ரோல் விலை, டீசல் விலை, கேஸ் விலை குறைக்கப்படும் என தெரிவித்து பிரச்சாரம் மேற்கொண்டனர்.

3, ஆம் வார்டு கவுன்சிலர் ஹைடெக் அன்பழகன் பிரச்சார ஏற்பாடுகளை செய்திருந்தார். நகரச் செயலாளர் முருகானந்தம் தலைமை வகித்தார். இதில் ஏராளமான மூத்த திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...