கவுண்டம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் சக்திபீடம் ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவிலின் 28ஆம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ விழா

ஸ்ரீ கருமாரியம்மன் சக்தி பீடம் பீடாதிபதி சிவ ஸ்ரீ செந்தில் சுவாமிகள், பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசா அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் கௌமாரபாளையம் தவத்திரு ராமானந்த குமரகுருபரர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


கோவை: கோவை, கவுண்டம்பாளையம் கிரிநகர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அமைந்திருக்கும் ஸ்ரீ கருமாரியம்மன் சக்திபீடம் ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவிலின் 28ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ விழா நேற்று (ஏப்ரல்.17) மிக விமர்சியாக நடைப்பெற்றது.

ஸ்ரீ கருமாரியம்மன் சக்தி பீடம் பீடாதிபதி சிவ ஸ்ரீ செந்தில் சுவாமிகள், பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசா அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் கௌமாரபாளையம் தவத்திரு ராமானந்த குமரகுருபரர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.



இவ்விழாவானது கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஸ்ரீ கருமாரியம்மன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா கணபதி ஹோமம், திருக்கொடியேற்றம், அவ்வை சண்முகி தெய்வீகக் குழு அம்மன் வேடமணிந்து சிறப்பு நடனம், ஸ்ரீதேவி நகர் வெற்றி விநாயகர் ஆலயத்திலிருந்து அக்னிகம்பம் எடுத்து வருதல், பூவோடு அக்னி ஏற்றுதல் மற்றும் அன்னதானம் வழங்குதல் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

மேலும் வருகின்ற (ஏப்ரல்.19) வெள்ளிக்கிழமை அன்று தீபாரதனை, அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்குதல் உடன் விழா இனிதே நிறைவடைய உள்ளது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...