கவுண்டம்பாளையத்தில் உள்ள ஸ்ரீ கருமாரியம்மன் சக்திபீடம் ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவிலின் 28ஆம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ விழா

ஸ்ரீ கருமாரியம்மன் சக்தி பீடம் பீடாதிபதி சிவ ஸ்ரீ செந்தில் சுவாமிகள், பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசா அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் கௌமாரபாளையம் தவத்திரு ராமானந்த குமரகுருபரர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.


கோவை: கோவை, கவுண்டம்பாளையம் கிரிநகர் பகுதியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அமைந்திருக்கும் ஸ்ரீ கருமாரியம்மன் சக்திபீடம் ஸ்ரீ மாசாணியம்மன் திருக்கோவிலின் 28ம் ஆண்டு திருக்கல்யாண உற்சவ விழா நேற்று (ஏப்ரல்.17) மிக விமர்சியாக நடைப்பெற்றது.

ஸ்ரீ கருமாரியம்மன் சக்தி பீடம் பீடாதிபதி சிவ ஸ்ரீ செந்தில் சுவாமிகள், பேரூர் ஆதீனம் தவத்திரு சாந்தலிங்க மருதாசா அடிகளார் மற்றும் சிரவை ஆதீனம் கௌமாரபாளையம் தவத்திரு ராமானந்த குமரகுருபரர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.



இவ்விழாவானது கடந்த செவ்வாய்க்கிழமை அன்று ஸ்ரீ கருமாரியம்மன் சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா கணபதி ஹோமம், திருக்கொடியேற்றம், அவ்வை சண்முகி தெய்வீகக் குழு அம்மன் வேடமணிந்து சிறப்பு நடனம், ஸ்ரீதேவி நகர் வெற்றி விநாயகர் ஆலயத்திலிருந்து அக்னிகம்பம் எடுத்து வருதல், பூவோடு அக்னி ஏற்றுதல் மற்றும் அன்னதானம் வழங்குதல் தொடங்கி பல்வேறு நிகழ்ச்சிகள் நடைப்பெற்றது.

மேலும் வருகின்ற (ஏப்ரல்.19) வெள்ளிக்கிழமை அன்று தீபாரதனை, அனைவருக்கும் அன்னதானம், பிரசாதம் வழங்குதல் உடன் விழா இனிதே நிறைவடைய உள்ளது.

Newsletter

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...