கோவையில் புலனாய்வு பிரிவு தலைமை காவலர் தற்கொலை – குடும்ப பிரச்சனை காரணமா? என போலீசார் விசாரணை

15 நாட்களுக்கு முன்பு லண்டனுக்கு மனைவி வேலைக்கு சென்றநிலையில், வீட்டில் தற்கொலை செய்துகொண்ட சரவணம்பட்டி புலனாய்வு பிரிவு தலைமை காவலர் பாலகுமாரின் உடலை கைப்பற்றி தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


கோவை: சரவணம்பட்டி புலனாய்வு பிரிவு தலைமை காவலராக பணிபுரிபவர்பாலகுமார்(38). இவரது மனைவி தனியர் நட்சத்திர குழும ஹோட்டல்களில் பணிபுரிந்து வருகிறார். அவர் பதவி உயர்வு பெற்று 15 நாட்களுக்கு முன்பு லண்டனுக்கு சென்றுள்ளார். அதனால், தனது இரண்டு குழந்தைகளையும் சேலத்தில் உள்ள தனது பெற்றோர் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார்.

பாலகுமார் தனது மனைவியுடன் தொலைபேசியில் சண்டையிட்டதாகக் கூறப்படுகிறது. பின்னர் தேர்தல் பணியில் கலந்து கொண்ட அவர், கடந்த ஏப்ரல் 20ம் தேதி காலை வீட்டிற்கு திரும்பினார்.சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அவர் வேலைக்கு வராமல் இருந்துள்ளார். மேலும் அவரது பெற்றோரும் அவரை அணுக முடியவில்லை என தெரிகிறது.

இதனால் பெற்றோர் சரவணம்பட்டி காவல் நிலையத்தை தொடர்பு கொண்டனர். அதனை தொடர்ந்து போலீஸார் நேற்று (ஏப்ரல்.21) இரவு வீட்டிற்கு விரைந்தனர். அப்போது பாலகுமார் தூக்கில் தற்கொலை செய்து கொண்டதை கண்டறிந்துள்ளனர். பின்னர் அவரது உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...