கோவை மத்திய சிறையில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதிய கைதிகள் அனைவரும் தேர்ச்சி

மத்திய சிறையில் 50 ஆண்கள், 4 பெண்கள் என மொத்தம் 54 கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதினர். இதில் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். அனைவருக்கும் சிறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், சிறை சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டு தெரிவித்தனர்.


கோவை: கோவை மத்திய சிறையில் 50 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் என 54 கைதிகள் 10-ம் வகுப்பு தேர்வை எழுதினர். இந்த நிலையில் இன்று பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது. அதில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்றனர்.

இதன் மூலம் 100 சதவீதம் தேர்ச்சியை சிறை கைதிகள் பெற்றுக் கொடுத்தனர். அதில் கைதிகள் மணிகண்டன் 379 மதிப்பெண்கள் பெற்று முதல் இடத்தையும், கவுதம் 359 பெற்று இரண்டாவது இடத்தையும், ஜார்ஜ் அசோக்குமார் 358 பெற்று மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.



இவர்கள் அனைவரையும் சிறை டி.ஐ.ஜி. சண்முகசுந்தரம், சிறை சூப்பிரண்டு செந்தில்குமார் ஆகியோர் இனிப்பு வழங்கி பாராட்டினர். கடந்த திங்கள் வெளியான பிளஸ் 2 தேர்விலும் கைதிகள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...