கோவை சாய்பாபா காலனி பகுதியில் போதை மாத்திரை, போதை மருந்து கடத்தல் – 3 பேர் கைது

2 கிராம் போதை மருந்து, 100 கிராம் எடை கொண்ட 1000 போதை மாத்திரைகள், 100 கிராம் கஞ்சா, 6 போதை ஊசிகள் ஆகியவற்றை கடத்தி வந்த மூன்று போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, பின்னர் சிறையில் அடைத்தனர்.


கோவை: கோவை சாய்பாபா காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், சப் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் ஆகியோர் சாய்பாபா காலனி மணியம் வேலப்பன் வீதியில் நேற்று மே.13 மாலையில் திடீர் சோதனை நடத்தினர்.அப்போது அந்த வழியாக 2 பைக்கில் வந்த 3 பேரை பிடித்து சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனை செய்தனர்.

அவர்களிடம் 2 கிராம் போதை மருந்து, 100 கிராம் எடை கொண்ட 1000 போதை மாத்திரைகள், 100 கிராம் கஞ்சா, 6 ஊசி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர் இது தொடர்பாக 3 பேரும் கைது செய்யப்பட்டனர். விசாரணையில் இவர்கள் கவுண்டம்பாளையம் சாமுண்டீஸ்வரி நகரை சேர்ந்த குணசேகரன் (வயது 24), இடையர்பாளையம், சரவணா நகரை சேர்ந்த விஷால் என்ற சந்தோஷ் (வயது 29), வெங்கிட்டபுரம், சாஸ்திரி ரோடுதுரைசாமி என்பது தெரிய வந்தது.

இவர்கள் மீது ஏற்கனவே பல வழக்குகள் உள்ளன. 2 பைக்குகள், போதை மருந்து, மாத்திரைகள், ஊசிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...