வால்பாறையில் பருவமழைக்கான முன்னெச்சரிக்கை ஆலோசனை கூட்டம் நடந்தது

வால்பாறையில் பருவமழை நேரத்தில் சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா மற்றும் அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடத்தியுள்ளது. முன்னெச்சரிக்கைகள், முகாம்கள் அமைத்தல், கால்நடைகள் காக்கவும் வன உயிரினங்கள் புகுதல் தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை தென்மேற்கு பருவமழை பெய்து வரும் இந்த மழையால் வால்பாறையில் உள்ள சோலையார் அணை, சின்னக்கல்லார் அணை, நீரார் அணை மற்றும் அக்காமலை செக்டேம் ஆகியவை நிரம்பி வழியும் இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படும்.



அதிக மழை பெய்யும் போது குடியிருப்பு பகுதிக்குள் தண்ணீர் செல்லாமல் தடுக்கும் வண்ணமும், சாலைகளில் மரங்கள் தடுக்கவும் மண்ணரிப்பு ஏற்படும் பகுதிகளை கண்டறியவும் பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்கவும் மழையால் பாதிப்பு ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பொள்ளாச்சி சப் கலெக்டர் கேத்தரின் சரண்யா தலைமையில் வாசுதேவன் மற்றும் அனைத்து அரசு துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் வால்பாறை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.



இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம் சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏழு முகாம்கள் அமைக்கப்பட்டு உள்ளது. வால்பாறை அரசு கலைக் கல்லூரி மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி நகராட்சி திருமண மண்டபம் மேலும் அட்டகட்டி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி சோலையார் அணை பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி ஆகியவைகள் முகாமாக மாற்றப்பட்டுள்ளது.

மேலும் 70 வயதுக்கு மேற்பட்டவர்களை கண்டறிந்து அதிக மழை பெய்வதற்கு முன்பதாகவே அவர்களை முகாமில் தங்க வைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மருத்துவ துறை சார்பாக டெங்கு மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் கொசுகளை ஒழிக்க வேண்டும் என்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து விதமான மருந்துகளை சேமித்து வைக்க வேண்டும் என்றும் தெரியப்படுத்தினர்.



மேலும் அரசு பேருந்துகளை சரியாக செயல்படுத்த வேண்டும் மேலும் மின்சார துறை சார்பாக மின் துண்டிப்பு ஏற்படும் இடங்களை கண்டறிந்து சரி செய்ய வேண்டும் என்றும் வனத்துறை சார்பாக வனவிலங்குகள் ஊருக்குள் போகாமல் தடுக்க வேண்டும் ஆதிவாசி பழங்குடி மக்கள் வாழும் பகுதியில் மண்ணரிப்பு போன்ற நிகழ்வுகள் ஏற்பாடாமல் தடுக்க முன் எச்சரிக்கை நடவடிக்கையாக ஆலோசனை செய்ய வேண்டும் என்றும்.

பொள்ளாச்சி சார் ஆட்சியர் கேத்ரின் சரண்யா அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...