கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் என் கல்லூரி கனவு வழிகாட்டு நிகழ்ச்சி

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் நடைபெற்ற என் கல்லூரி கனவு நிகழ்ச்சியில், ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.


கோவை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் என் கல்லூரி கனவு எனும் உயர்கல்விக்கு வழிகாட்டும் நிகழ்ச்சி தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதில் 12 ஆம் வகுப்பு முடித்த ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்கள் கல்லூரியில் சேர்வதற்கும், அவர்கள் எந்த துறையை தேர்ந்தெடுத்தால் நன்றாக இருக்கும் என்றும் பல்வேறு ஆலோசனைகள்வழங்கப்படுகின்றன.



மேலும் கல்லூரியில் அரசினுடைய உதவி எவ்வாறு பெறுவது என்பது குறித்தும் எடுத்துரைக்கப்பட்டு பல்வேறு ஆலோசனைகளும், அறிவுரைகளும் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் என் கல்லூரி கனவு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி தலைமையில் இன்று மே.18 நடைபெற்றது.



இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த ஆதிதிராவிடர் பழங்குடியின மாணவர்கள் பலர் கலந்து கொண்டு பயனடைந்தனர். இந்நிகழ்வில் மாவட்டஆதிதிராவிடர் நல அலுவலர் மணிமேகலை, தாட்கோ மாவட்ட மேலாளர் மகேஸ்வரி உட்பட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

சிங்காநல்லூரில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் வேட்புமனு தாக்கல்

சிங்காநல்லூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் K.R. ஜெயராமன் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தேர்தல் பணிமனை திறப்பு விழாவுக...

கோவை வடக்கில் ராஜஸ்தான் முதல்வர் முன்னிலையில் வானதி சீனிவாசன் வேட்பு மனு தாக்கல்

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ ராஜஸ்தான் முதல்வர் பஜன் லால் சர்மா, அண்ணாமலை முன்னிலையில்...

சூலூர் தொகுதி: AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி வேட்பு மனு தாக்கல்

சூலூர் தொகுதியில் AIADMK வேட்பாளர் வி.பி.கந்தசாமி கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் புடைசூழ வேட்பு மனுவை தா...

தொண்டாமுத்தூரில் AIADMK வேலுமணி வேட்புமனு: அண்ணாமலை உடன் தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் S.P. வேலுமணி இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். BJP முன்னாள் மாந...

தொண்டாமுத்தூர்: N.R. கார்த்திகேயன் வேட்புமனு தாக்கல்

தொண்டாமுத்தூர் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் N.R. கார்த்திகேயன், பேரூர் தாலுக்கா அலுவலகத்தில் வேட...

மூலப்பொருள் விலை உயர்வால் 'ஜாப் ஒர்க்' நிறுவனங்கள் இயந்திர கட்டணம் உயர்த்த 'டாக்ட்', 'காட்மா' தொழில் அமைப்பினர் முடிவு

கோவையில் மூலப்பொருட்கள் விலை உயர்வால் குறுந்தொழில் நிறுவனங்களுக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், Job Work நிறுவனங்கள் CNC,...