காங்கேயம் படியூரில் இஸ்லாமியர்கள் இந்து கோவிலுக்கு சீர்வரிசை நடத்திய நிகழ்வு

காங்கேயம் படியூர் ஓட்டப்பாளையம் ரோஸ் கார்டன் பகுதியில் இஸ்லாமியர்கள் 300 குடும்பங்களுடன் வசிக்கும் நிலையில் இந்து கோவிலுக்கு சீர்வரிசையாக சாமி தரிசனம் செய்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் படியூர் அடுத்த ஓட்டப்பாளையம் ரோஸ் கார்டன் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதியில் இந்துக்கள் மற்றும் இஸ்லாமியர்கள் என அனைத்து சமுதாயத்தினரும் ஒன்றாக வசித்து வரும் நிலையில். இப்பகுதியில் விநாயகர் கோவில் கட்ட தீர்மானிக்கப்பட்டது. அதற்கு போதுமான இடம் இல்லாத சூழ்நிலையில் அப்பகுதியில் உள்ள ஆர் எம் ஜே ரோஸ் கார்டன் முஸ்லிம் ஜமாத் பள்ளிவாசலுக்கு சொந்தமான ஆறு லட்சம் ரூபாய் மதிப்பிலான மூன்று சென்ட் நிலத்தை இஸ்லாமியர்கள் கோவிலுக்கு வழங்கினர்.

இதனைத் தொடர்ந்து அங்கு கோவில் கட்டும் பணி நடைபெற்று தற்போது நிறைவடைந்துள்ளது.



இன்று கும்பாபிஷேகம் நடைபெறும் நிலையில் இஸ்லாமியர்கள் பள்ளிவாசலில் இருந்து ஐந்து தட்டுகளில் சிறு வரிசை பொருட்களை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து கோவிலுக்கு வழங்குகின்றனர். மேலும் கோவில் விழாவில் அன்னதானம் செய்யவும் இஸ்லாமியர்கள் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...