உடுமலை பாஜக சார்பில் மோடியின் மூன்றாவது பதவியேற்பு விழா கொண்டாட்டம்

உடுமலையில் பாஜக சார்பில் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்ற கொண்டாட்டத்தில் பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கப்பட்டன.


திருப்பூர்: நாடாளுமன்றத் தேர்தல் நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து கடந்த 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியானது. பரபரப்பான முடிவுகளுக்கு இடையே பாஜக கூட்டணி தனி பெரும்பான்மை பெற்று ஆட்சியை தக்க வைத்தது. அதைத் தொடர்ந்து நேற்று பதவியேற்பு விழா நடைபெற்றது. பிரதமராக 3-ம் முறையாக நரேந்திர மோடி பதவியேற்றார்.

அவரைத் தொடர்ந்து கேபினட் அமைச்சர்கள் இணை அமைச்சர்கள் என மொத்தம் 72 அமைச்சர்கள் பதவி ஏற்றனர். இந்த விழாவை பாஜக வினர் நாடு முழுவதும் கொண்டாடினார்கள். அந்த வகையில் உடுமலை நகர பாஜக சார்பில் மோடி பதவியேற்பு விழா கொண்டாடப்பட்டது.



விழாவிற்கு நகரத் தலைவர் கண்ணாயிரம் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச் செயலாளர் வடுகநாதன் முன்னிலை வகித்தார். அதைத் தொடர்ந்து மோடி 3-ம் முறையாக பதவி ஏற்பதற்கு உறுதுணையாக இருந்த கூட்டணி கட்சி மற்றும் பாஜகவினரை பாராட்டி நிர்வாகிகள் பேசினார்கள்.

மேலும் உடுமலை நகராட்சியில் 33 வார்டுகளில் சுமார் 7000 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்த நிலையில் வாக்களித்த வாக்காளர்களுக்கும் வெற்றிக்காக பாடுபட்ட பாஜக நிர்வாகிகளுக்கு நன்றிகள் பேய்க்கப்பட்டது.



இதையடுத்து பட்டாசு வெடிக்கப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.



இந்த நிகழ்வில் பொதுச் செயலாளர்கள் சீனிவாசன், தம்பிதுரை, மாவட்ட செயலாளர் கலா, உடுமலை மகளிர் அணி ரதி, நகர துணைத் தலைவர்கள் உமா குப்புசாமி, கணேசன், ஹரி, சின்ராஜ், முருகேஷ், சிவசங்கர் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...