தாராபுரம் அருகே கிராம சாலைப்பகுதியில் கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை – பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயற்சி

கவுண்டச்சி புதூர் ஊராட்சி எல்லைப்பகுதியில், சுப்பிரமணியபுரம், ராம் நகர், கொண்டாரசம்பாளையம், உள்ளிட்ட கிராம பகுதிகளுக்குச் செல்லும் சாலையில் கழிவுகளை கொட்டும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு நிலவியது


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது கவுண்டச்சி புதூர் ஊராட்சி. இதன் எல்லைப் பகுதியில் உடுமலை செல்லும் சாலையில் உள்ள சுப்பிரமணியபுரம், ராம் நகர், கொண்டாரசம்பாளையம், உள்ளிட்ட கிராம பகுதிகளுக்குச் செல்லும் சாலையில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்தபொதுமக்களில் சிலரும், தாராபுரம் நகராட்சி பகுதியில் பிராய்லர் கோழி இறைச்சி கடைகள் வைத்திருக்கும் பலரும் இரவோடு, இரவாக அதன் கழிவுகளை கொட்டிச் செல்வது வாடிக்கையாக உள்ளது.



இந்நிலையில்குப்பைகளால் சுப்பிரமணியபுரம், கொண்டரசம்பாளையம் பகுதியில் வசிக்கும் பொது மக்களுக்கு நோய் பரவும் அபாயம் ஏற்பட்டது. இது குறித்து கவுண்டச்சிபுதூர் ஊராட்சிக்கும், தாராபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கும் பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் எந்தொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை.



இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலையில் சுப்பிரமணியபுரம் செல்லும் சாலையில் குப்பை கொட்டப்படும் இடம் அருகே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாராபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுருநாதன், கவுண்டச்சி ஊராட்சி செயலாளர் நாகராஜ், மற்றும் போலீசார் மறியலில் ஈடுபட முயன்ற பொது மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.

குப்பைகளை பத்து நாட்களுக்குள் அகற்றாவிட்டால், வரும் 23ம் தேதி தாராபுரம் உடுமலை சாலையில் தண்ணீர் பந்தல் அருகே சாலை மறியலில் ஈடுபடுவோம் என அதிகாரிகளிடம் பொதுமக்கள் ஆவேசமாக பேசினர். பொதுமக்களை சமாதானப்படுத்திய தாராபுரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் உடனடியாக ஜேசிபி இயந்திரத்தை வரவழைத்து அப்பகுதியில் உள்ள அனைத்து குப்பைகளையும் உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொண்டார்.

மேலும் கவுண்டச்சி புதூர் ஊராட்சி பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை நிரந்தரமாக அகற்றி ஒரே இடத்தில் சேமிக்க தகுந்த இடம் தேர்வு செய்யப்பட்டு வருவதாகவும், பொது மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாமல் குப்பை கிடங்கு அமைத்து இனிவரும் காலங்களில் கவுண்டச்சி புதூர் ஊராட்சி பகுதிகளில் குப்பைகள் தேங்காதவாறு நடவடிக்கை எடுக்க இருப்பதாக பொதுமக்களிடம் தெரிவித்தார்.

மேலும் சட்ட விரோதமாக குப்பை கொட்டும் நபர்களை கையும் களவுமாக பிடிக்க அப்பகுதியில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

வால்பாறை மலைப்பாதையில் சுற்றுலா வேன் விபத்து: 8 பேர் உயிரிழப்பு..!

வால்பாறை - பொள்ளாச்சி மலைப்பாதையில் சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற டெம்போ டிராவலர் வேன் பள்ளத்தில் கவிழ்ந்ததில் 8 பேர் உ...

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...