கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இரத்த தானம் முகாம்

இரத்த தானம் முகாமில் பல்கலைக்கழக மாணவ, மாணவியர், கொடையாளர்கள், ஆசிரியர், ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட சுமார் 104 பேர் இரத்த தானம் செய்தனர்.



கோவை: உலக இரத்த தானம் தினத்தை முன்னிட்டு கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இன்று ஜூன்.14 இரத்த தான முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கோவை அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனை உடன் இணைந்து இந்த முகாம் நடத்தப்பட்டது. தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி இந்த முகாமை துவக்கி வைத்தார்.

சிங்காநல்லூர் இஎஸ்ஐ மருத்துவமனையின் முதன்மையர் ரவீந்திரன், இதில் தலைமை வகித்தார். இஎஸ்ஐ ரத்த வங்கியின் தலைமை மருத்துவர் டாக்டர் உமாசரோஜினி தனது குழுவினருடன் முகாமை நடத்தினார். இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவ, மாணவியர். கொடையாளர்கள், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள், ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்கள் உட்பட சுமார் 104 பேர் இரத்த தானம் செய்தனர்.



முகாம் துவங்குவதற்கு முன்பாக வேளாண்மைப் பல்கலைக்கழக நாட்டு நலப்பணித்திட்டத்தின் 200 மாணவர்கள் இரத்த தான விழிப்புணர்வு பேரணியை நடத்தினர். பல்கலைக்கழகத்தின் மாணவர் நலத்துறை முதன்மையர் முனைவர் மரகதம் பேரணியை துவக்கி வைத்தார்.

நாட்டு நலப்பணித்திட்டத்தின் அலுவலர்களும் ஒருங்கிணைப்பாளரும் கலந்து கொண்டனர். பேரணியில் மாணவ, மாணவியர் இரத்த தானத்தின் முக்கியத்துவம் மற்றும் பயன்களை பொதுமக்களிடம் பகிர்ந்து கொண்டனர்.

Newsletter

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...