சி.பி.ஐ. விசாரணை கோரி கவர்னர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மனு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த பரிந்துரை செய்யவேண்டும் என கவர்னர் ஆர்.என்.ரவியை நேரில் சந்தித்து தமிழக பாஜக தலைவர் அண்ணமலை மனு அளித்துள்ளார்.


கோவை: கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த 20ந்தேதி கள்ளச்சாராயம் குடித்த விவகாரத்தில் இதுவரை 58 பேர் உயிரிழந்து உள்ளனர். இன்னும் பலர் மருத்துவமனைகளில் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் உயிர்ப்பலி இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தமிழகம் மட்டும் இன்றி இந்திய அளவில் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தமிழக வெற்றிக் கழக தலைவர் நடிகர் விஜய் ஆகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர்.

ஆனால், முதல்வர் ஸ்டாலின் இதுவரை கள்ளக்குறிச்சிக்கு செல்லவில்லை. கள்ளச்சாராயத்தால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண உதவி வழங்கப்படும் என சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். மேலும் தாய், தந்தையை இழந்த குழந்தைகளின் பெயரில் தலா ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்படும். அவர்களது கல்வி செலவை அரசே ஏற்கும் என்றும் அறிவித்தார்.

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு கடிதம் எழுதி இருப்பதாக தமிழக பாரதிய ஜனதா கட்சி தலைவர் அண்ணாமலை ஏற்கனவே கூறி இருந்தார்.

இந்நிலையில் அண்ணாமலை இன்று ஜூன்.24 தமிழக கவர்னர் ஆர்.என். ரவியை அவரது மாளிகையில் சந்தித்தார். அப்போது அவருடன் முன்னாள் கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் உள்பட பாஜக மூத்த தலைவர்கள் முன்னணி பிரமுகர்களும் சென்று இருந்தனர்.

இந்த சந்திப்பின்போது அண்ணாமலை ஆளுனர் ரவியிடம் கொடுத்த கோரிக்கை மனுவில் கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்துவதற்கு பரிந்துரை செய்யவேண்டும் என கூறப்பட்டு இருந்தது.

மேலும் கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தால் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததற்கு மாநில மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் எஸ்.முத்துசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டது.

மதுவிலக்கு அமைச்சரை பதவி நீக்கம் செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலினை வலியுறுத்துமாறு ஆளுநரிடம் கோரிக்கை வைத்தோம் என்று அண்ணாமலை சமூக ஊடக தளமான எக்ஸ்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

Newsletter

உடுமலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா: தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து மாற்றம்

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று மாலை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா நடைபெறுவதால், கோவை-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சால...

தொண்டாமுத்தூரில் AIADMK வேட்பாளர் S.P. வேலுமணிக்கு இந்து மக்கள் கட்சி ஆதரவு அறிவிப்பு

தொண்டாமுத்தூர் தொகுதியில் இந்து மக்கள் கட்சி சுயேச்சை வேட்பாளர் சூர்யாவின் வேட்பு மனு நிராகரிக்கப்பட்ட நிலையில், மாநில ப...

கோவை மாவட்டத்தில் தேர்தல் சோதனையில் ரூ.8.18 கோடி பணமும் நகையும் பறிமுதல்

கோவை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும்படை மற்றும் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கடந்த இரு நாள்களில் ரூ.8.18 கோடி ர...

மேட்டுப்பாளையம் தொகுதியில் கவிதா கல்யாணசுந்தரத்திற்கு ஆதரவாக காரமடையில் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி தலைமையில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதி வேட்பாளர் கவிதா கல்யாணசுந்த...

ஆனைகட்டியில் மலைவாழ் மக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக வேட்பாளர் அருண்குமார்

கோவை ஆனைகட்டி பகுதியில் மலைவாழ் மக்கள் மத்தியில் அதிமுக வேட்பாளர் பி.ஆர்.ஜி.அருண்குமார் தனது தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொ...

கோவை கடைவீதி போலீசாரின் அதிரடி சோதனை: மெத்தாம்பெட்டமைன் விற்பனை செய்த 3 பேர் கைது

கோவை கடைவீதி போலீசார் தெற்கு உக்கடத்தில் ரோந்து பணியின்போது சந்தேகத்தின் அடிப்படையில் 3 பேரை சோதனை செய்தனர். அவர்களிடம்...