ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் 72-வது நிறுவனர் தின விழா கொண்டாடப்பட்டது

கோவையில் உள்ள ஜி.கே.என்.எம். மருத்துவமனை தனது 72-வது நிறுவனர் தினத்தை கொண்டாடியது. இந்த விழாவில் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.




கோவை, ஜூன் 29, 2024: ஜி.கே.என்.எம். மருத்துவமனை தனது 72வது நிறுவனர் தினத்தை, உன்னத நோக்கத்திற்காக தொலைநோக்கு சிந்தனையுடன் தங்களை அர்ப்பணித்த நிறுவனர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இத்தினத்தை கொண்டாடுவதில் மகிழ்ச்சி அடைகிறது. கோவையில் கடந்த எழுபது வருடங்களுக்கும் மேலாக மருத்துவ சேவை அளிப்பதில் நம்பிக்கை, நோய்களை குணப்படுத்துதல் மற்றும் மருத்துவ ரீதியான முன்னேற்றம் ஆகியவற்றுக்கு கலங்கரை விளக்கமாக ஜி.கே.என்.எம் மருத்துவமனை உயர்ந்து நிற்கிறது.

ஜி.கே.என்.எம். மருத்துவமனை 1952 ஆம் ஆண்டு 50 படுக்கைகள் கொண்ட தாய் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையாக நிறுவப்பட்டது. மேலும் 650 படுக்கைகள் கொண்ட சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையாக வளர்ந்துள்ளது. சமீபத்தில் 30 மருத்துவ துறைகள் மற்றும் 200 மருத்துவர்களை உள்ளடக்கிய 3.3 லட்சம் சதுர அடியில் புதிய ஒருங்கிணைந்த வெளிநோயாளிகள் மருத்துவ மையம் திறக்கப்பட்டது. இது நாட்டிலேயே முதல் முறையாகும்.

நோயாளிகளுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சைகளை அளிப்பதுதான் ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முக்கிய நோக்கமாகும். அதிநவீன மருத்துவ உபகரணங்களை கொண்டு சிகிச்சை அளிக்கப்படுவதால் ஒவ்வொரு நோயாளிக்கும் விரைவான, துல்லியமான நோய் கண்டறிதல் மற்றும் உகந்த கவனிப்பு ஆகியன உறுதி செய்யப்படுகிறது. ஜி.கே.என்.எம். மருத்துவமனை ரோபோ-உதவியுடன் கூடிய அறுவை சிகிச்சைக்கு டா வின்சி ரோபோடிக் அமைப்பு போன்ற அதிநவீன தொழில்நுட்பத்தை நிறுவியுள்ளது.

தேவையான அனைத்து மருத்துவ உபகரணங்களையும் உள்ளடக்கிய தீவிர சிகிச்சைப் பிரிவுகள், மேம்பட்ட அறுவை சிகிச்சை அரங்குகள், 24 மணி நேரமும் அர்ப்பணிக்கப்பட்ட இளைஞோர் மற்றும் குழந்தைகளுக்கான அவசரநிலை சிகிச்சை வசதிகள், நவீன ஆய்வுக்கூடம் மற்றும் இமேஜிங் வசதிகள் உள்ளன. கோயம்புத்தூர் மக்களுக்கு எங்களது மருத்துவ சேவைகளை ஒரு பிரதியேக குழுவுடன் நோயாளிகளின் இல்லங்களுக்கே சென்று வழங்குகிறோம். மேலும் வீரபாண்டியில் கிராமப்புற சேவைகளை வழங்குதன் மூலமாக ஜி.கே.என்.எம். மருத்துவமனை அதன் வளாகத்திற்கு அப்பாலும் தன் சேவைகளை விரிவுபடுத்தியுள்ளது.









ஜி.கே.என்.எம். தனது 72வது நிறுவனர் தினத்தை கொண்டாடும் வேளையில், 29 ஜூன் 2024 அன்று மாலை 5.30 மணிக்கு மணி மேல்நிலைப் பள்ளியின் நானி பல்கீவாலா ஆடிட்டோரியத்தில், நிறுவனர்கள் மற்றும் அவர்களின் நீடித்த பாரம்பரியத்தை கௌரவிக்கும் வகையிலும், மருத்துவர்கள் மற்றும் ஊழியர்களின் தன்னலமற்ற சேவைகளை அங்கீகரித்து கௌரவிக்கும் வகையிலும் விழா நடைபெற்றது. சிறப்புமிக்க சேவை விருதுகள், செவல்தீரன் சிறப்பு விருதுகள் மற்றும் மெரிட்டோரியஸ் சர்வீஸ் விருதுகளை வழங்குவதன் மூலம் மருத்துவமனை பெருமிதம் கொள்கிறது.

ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் முதன்மை செயல் அலுவலர் டாக்டர்.ரகுபதி வேணுசாமி அனைவரையும் வரவேற்றார். இந்த விருது வழங்கும் விழாவில் குப்புசாமி நாயுடு அறக்கட்டளையின் தலைவர் திரு.எஸ்.பதி மற்றும் துணைத் தலைவர் திரு.ஆர்.கோபிநாத் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். ஜி.கே.என்.எம். மருத்துவமனையின் தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர்.மனோகரன் நன்றியுரையாற்றினார்.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...