கோவை வஉசி பார்க் அருகே வாலிபரை கடத்தி பணம், செல்போன், ஆவணங்கள் பறிப்பு: மூவர் கைது

கோவையில் நில விற்பனை தொடர்பான தகராறில், வாலிபரை கடத்தி பணம், செல்போன், நில ஆவணங்களை பறித்த வழக்கில் மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். இரு நபர்கள் தலைமறைவாக உள்ளனர்.


Coimbatore: கோவை வஉசி பார்க் அருகே நடந்த கடத்தல் மற்றும் கொள்ளை சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நில விற்பனை தொடர்பான தகராறு காரணமாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அச்சையூரை சேர்ந்த விவசாயி தாமோதரன் (31), தனது 35 சென்ட் நிலத்தை தாராபுரம் தாசம்பட்டியை சேர்ந்த கட்டுமான தொழிலதிபர் ஹரிபிரசாத் (34) என்பவருக்கு ரூ. 2.50 கோடிக்கு விற்க ஒப்பந்தம் செய்திருந்தார். முதற்கட்டமாக ரூ. 8.25 லட்சம் கொடுக்கப்பட்டது. ஆனால், மீதமுள்ள தொகை குறித்து இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

சம்பவ தினத்தன்று, நிலம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த ஹரிபிரசாத் தாமோதரனை கோவைக்கு அழைத்தார். வஉசி பார்க் அருகே வந்த தாமோதரனை இரண்டு வாலிபர்கள் காரில் கடத்தி சென்றனர். பின்னர் அவரிடமிருந்த ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ. 30,000 எடுத்துக் கொண்டதோடு, அவரது செல்போன் மற்றும் நில ஆவணங்களையும் பறித்துக் கொண்டு தப்பினர்.

இது குறித்து தாமோதரன் ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில், ஹரிபிரசாத்தின் தூண்டுதலின் பேரில் இச்சம்பவம் நடந்தது தெரியவந்தது. இதையடுத்து, ஹரிபிரசாத், கணபதி சங்கனூரை சேர்ந்த பிரவீன்குமார் (37), சரவணம்பட்டி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த பாபு (38) ஆகிய மூவரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய செந்தில், ஜான்சன் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது போலீசார் இவர்களை தேடி வருகின்றனர். வழக்கு தொடர்பான விசாரணை ஜூன் 5 அன்று நடைபெற உள்ளது.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...