சைபர் குற்றங்கள் அதிகரிப்பு: காவல்துறைக்கு சவால் - கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன்

கோவையில் சைபர் குற்றங்கள் அதிகரிப்பு குறித்தும், காவலர்களுக்கான மருத்துவ முகாம் பற்றியும் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் கருத்து தெரிவித்தார். மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் மற்றும் சைபர் குற்றங்கள் விசாரணை குறித்தும் விளக்கமளித்தார்.


Coimbatore: கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவது காவல்துறைக்கு தொழில்நுட்ப ரீதியாக ஒரு சவால் என்று தெரிவித்துள்ளார். அவினாசி சாலையில் உள்ள காவலர் பயிற்சி பள்ளி மைதானத்தில் நடைபெற்ற காவலர்களுக்கான விரிவான மருத்துவ முகாமை துவக்கி வைத்து பேசிய அவர், சைபர் குற்றங்கள் குறித்து வழக்குகளில் தனி குழுவினர் விசாரணை செய்து விரைவில் குற்றவாளிகளை கைது செய்யப்படுவார்கள் என்றும் கூறினார்.

ஸ்வர்கா பவுண்டேஷன் சார்பாக நடத்தப்பட்ட இந்த முகாமில், ஆயுர்வேதம், உட்சுரப்பியல், பிசியோதெரபி, பெண்கள் தொடர்பான மருத்துவம், நுரையீரல் பரிசோதனை, பல் மற்றும் கண் பரிசோதனை உள்ளிட்ட பல்வேறு மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டன. காவலர்களின் உடல்நல ஆரோக்கியத்தைக் காக்கும் வகையில் தொடர்ந்து பல்வேறு முகாம்கள் நடத்தப்பட்டு வருவதாகவும் காவல் ஆணையர் தெரிவித்தார்.



மேலும், மாநகர காவல் ஆணையர் அலுவலகம் மற்றும் காவல் நிலையங்களுக்கு வரும் மாற்றுத்திறனாளி பொதுமக்களுக்கென பிரத்யேக வசதிகள் விரைவில் ஏற்படுத்தப்படும் என்றும் பாலகிருஷ்ணன் உறுதியளித்தார்.

சைபர் குற்றங்கள் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருவதாகவும், அதையும் தாண்டி சிலர் ஏமாந்து விடுவதாகவும் கவலை தெரிவித்த அவர், இது போன்ற வழக்குகளில் தனி குழுவினர் விசாரணை செய்து விரைவில் குற்றவாளிகளை கைது செய்வார்கள் என்றும் உறுதியளித்தார்.



முகாம் துவக்க நிகழ்ச்சியில் துணை ஆணையர்கள் சரவணன், சுகாசினி, உதவி ஆணையர் சேகர், ஸ்வர்கா பவுண்டேஷன் தாளாளர் தினேஷ் குமார் பாண்டியா, நிர்வாக அறங்காவலர் ஸ்வர்ணலதா, தாளாளர் குருபிரசாத் உட்பட காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...