கோவை வடசித்தூர் அருகே சரக்கு வாகன ஓட்டுநர் கழுத்தறுத்து கொலை: நெகமம் போலீசார் விசாரணை

கோவை வடசித்தூர், செட்டிபாளையம் சாலையில் சரக்கு வாகன ஓட்டுநர் பிரபாகரன் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். நெகமம் போலீசார் மோப்ப நாய் உதவியுடன் கொலையாளிகளை தேடி வருகின்றனர்.


Coimbatore: கோவை சுந்தராபுரத்தைச் சேர்ந்த பிரபாகரன் (32) என்பவர் சொந்தமாக சரக்கு வாகனம் ஓட்டி வந்தார். ஜூலை 5 அன்று, சரக்கு வண்டி வாடகைக்கு வேண்டும் என்று கூறி இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் பிரபாகரனை அழைத்துச் சென்றனர்.


வடசித்தூர், செட்டிபாளையம் சாலையில் சரக்கு வாகனத்தில் செல்லும் போது, திடீரென அந்த இரண்டு நபர்கள் பிரபாகரனின் கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு தப்பி ஓடியுள்ளனர். சாலையில் நடுவில் நீண்ட நேரமாக சரக்கு வாகனம் நின்றதால், அவ்வழியே சென்றவர்கள் சிலர் சந்தேகத்தின் பேரில் வாகனத்தை எட்டிப் பார்த்தனர்.


ஓட்டுநர் கொலை செய்யப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள், உடனடியாக நெகமம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், மோப்ப நாய் உதவியுடன் கொலையாளிகளை கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த நெகமம் போலீசார், கொலைக்கான காரணம் மற்றும் குற்றவாளிகளை கண்டறியும் விசாரணையை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த கொடூரமான கொலை சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...