கோவையில் நடமாடும் குரங்குகளை பிடிக்க கூண்டு வைக்க வேண்டும் - மக்கள் கோரிக்கை

கோவை நகரின் பல பகுதிகளில் குரங்குகள் அட்டகாசம் செய்வதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறை கூண்டு வைத்து குரங்குகளை பிடிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மத்திய நகர் பகுதியில் கடந்த சில மாதங்களாக குரங்குகள் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. உக்கடம், கோட்டைமேடு, பெரிய கடை வீதி, ரத்தினபுரி போன்ற பகுதிகளில் குரங்குகள் புகுந்து தொல்லை தருவதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், ஜூலை 19 அன்று சிவானந்தா காலனியில் உள்ள கண்ணப்பன் நகர் பகுதிக்கு வந்த குரங்கு ஒன்று அட்டகாசத்தில் ஈடுபட்டது. இதைப் பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதேபோல், மருதமலை சாலை வடவள்ளி முல்லை நகர் பகுதியிலும் குரங்கு ஒன்று சுற்றித் திரிவதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

குரங்குகளின் தொல்லையால் குழந்தைகள் மற்றும் பெண்கள் வீட்டை விட்டு வெளியே வர அச்சப்படுகின்றனர். இதனால் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. முன்னதாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தபோது, அவர்கள் வருவதற்கு முன்பே குரங்குகள் அப்பகுதியை விட்டு ஓடிவிட்டதாக மக்கள் தெரிவித்தனர்.

இந்த நிலையில், அட்டகாசத்தில் ஈடுபடும் குரங்குகளை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குரங்குகளின் தொல்லையை முடிவுக்கு கொண்டு வர வனத்துறை விரைவில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...