கோவை மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் புதிய உறுப்பினர் அட்டைகளை வழங்கினார்

கோவையில் புதன்கிழமை, மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் புதிய உறுப்பினர் அடையாள அட்டைகளை வழங்கினார். கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழகத்தின் பவளவிழா ஆண்டை முன்னிட்டு இந்த நிகழ்வு நடைபெற்றது.


கோவை: கோவையில் புதன்கிழமை (24.07.2024) அன்று, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி, கலைஞர் நூற்றாண்டு மற்றும் கழகத்தின் பவளவிழா ஆண்டை முன்னிட்டு, புதிய கழக உறுப்பினர்களுக்கான அடையாள அட்டைகளை மாவட்ட திமுக செயலாளர் நா. கார்த்திக் வழங்கினார்.



கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் உள்ள சாயிபாபா காலனி, கணபதி, மற்றும் மணியகாரன்பாளையம் பகுதிகளில் நடைபெற்ற இந்த நிகழ்வில், பல்வேறு வார்டுகளின் வட்டக்கழகச் செயலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.

சாயிபாபா காலனியில் நடைபெற்ற நிகழ்வில், பகுதி திமுக செயலாளர் கே.எம்.ரவி முன்னிலையில், வார்டு எண்கள் 18, 31, 32, 45 ஆகியவற்றின் வட்டக்கழகச் செயலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் மாமன்ற உறுப்பினர் பேபிசுதா ரவி, மாநகர் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி தலைவர் சிவராமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



கணபதி பகுதியில், பகுதி திமுக செயலாளர் கோவை லோகு முன்னிலையில், வார்டு எண்கள் 29, 30, 46, 47 ஆகியவற்றின் வட்டக்கழகச் செயலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்வில் பகுதி துணைச் செயலாளர் வி.டி.செந்தில்குமார், அவைத் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர்.



மணியகாரன்பாளையம் பகுதியில், பகுதி திமுக செயலாளர் அஞ்சுகம் பழனியப்பன் முன்னிலையில், வார்டு எண்கள் 19, 20, 25 ஆகியவற்றின் வட்டக்கழகச் செயலாளர்களுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில் அவைத் தலைவர் எஸ்.வெள்ளிங்கிரி, மாநகர் மாவட்ட மகளிர் அணி தலைவர் சி.வி.தீபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.



அனைத்து நிகழ்வுகளிலும் கழகத் தொண்டர்கள், கழக செயல்வீரர்கள், மற்றும் BLA-2 பூத் கமிட்டி உறுப்பினர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...