தொண்டாமுத்தூர் அருகே மாட்டுத் தீவனத்தை உண்ட காட்டு யானைகள்: சிசிடிவி காட்சிகள் வெளியீடு

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூரில் இரண்டு காட்டு யானைகள் விவசாயியின் தோட்டத்திற்குள் நுழைந்து, மாட்டுக்கொட்டகையில் வைக்கப்பட்டிருந்த தவிட்டை உண்டு சென்றன. இச்சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.


Coimbatore: கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர், மருதமலை, தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் காட்டு யானைகள் அதிகளவில் வசிக்கின்றன. இந்த வன விலங்குகள் உணவு மற்றும் தண்ணீரைத் தேடி அடிக்கடி கிராமங்களுக்குள் நுழைகின்றன. இவ்வாறு வரும் யானைகள் வீடுகள், ரேஷன் கடைகள், உணவுப் பொருட்கள் வைக்கப்பட்டுள்ள இடங்கள் மற்றும் விளைநிலங்களை சேதப்படுத்தி செல்கின்றன.


வனத்துறையினர் பல்வேறு குழுக்களை அமைத்து கண்காணித்து, ஊருக்குள் நுழையும் யானைகளை உடனடியாக வனப்பகுதிக்குள் விரட்டி வருகின்றனர். இந்நிலையில், தொண்டாமுத்தூர் அருகே கெம்பனூரில் வசிக்கும் விவசாயி கதிரவனின் தோட்டத்திற்கு நள்ளிரவில் இரண்டு காட்டு யானைகள் வந்துள்ளன. அவை மாட்டுக்கொட்டகையில் உள்ள அறையில் மாடுகளுக்காக வைக்கப்பட்டிருந்த தவிடு மூட்டையை சாப்பிட்டுச் சென்றுள்ளன.


யானைகள் அறையின் கதவை உடைத்து, தவிடு மூட்டையை முழுவதுமாக உண்டுவிட்டுச் சென்றுள்ளன. ஆனால், அதிர்ஷ்டவசமாக மாட்டுக்கொட்டகையில் இருந்த மாடுகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தை விவசாயி கதிரவன் தனது செல்போனில் வீடியோ பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை அவர் ஜூலை 28 அன்று வெளியிட்டுள்ளார்.


இச்சம்பவம் குறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், காட்டு யானைகளை அன்றிரவே வனப்பகுதிக்குள் விரட்டியடித்துள்ளனர். இப்பகுதியில் அடிக்கடி யானைகள் ஊருக்குள் வருவதால், வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

FL2 மதுபான உரிமங்களை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் - முதலமைச்சருக்கு வானதி சீனிவாசன் கோரிக்கை

பொறுப்பேற்ற மூன்றாவது நாளிலேயே பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகிலிருந்த 717 டாஸ்மாக் கடைகளை மூட உத்தர...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

கோவை மாவட்ட பஞ்சாயத்துக்கு தேசிய விருது: நல்லாட்சிக்கான அங்கீகாரம்

கோவை மாவட்ட பஞ்சாயத்து தேசிய அளவில் மூன்றாம் இடம் பெற்று நானாஜி தேஷ்முக் விருதை வெல்ல தேர்வானது. வறுமை ஒழிப்பு, நீர் மேல...

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர...

திருமணமானதை மறைத்து கர்ப்பமாக்கிய பெண்ணுக்கு மிரட்டல்: காவலர் கைது

கோவை அருகே திருமணமானதை மறைத்து இளம்பெண்ணை காதலித்து கர்ப்பமாக்கியதுடன், கட்டாய கருக்கலைப்பு மற்றும் கொலை மிரட்டல் விடுத்...

கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று இரவு முதல் போக்குவரத்து கட்டுப்பாடு

கேபிள் பதிக்கும் பணி காரணமாக கோவை ஜிடி நாயுடு மேம்பாலத்தில் இன்று (மே 14) இரவு முதல் வாகனங்கள் செல்ல கட்டுப்பாடுகள் விதி...