கோவை சிங்காநல்லூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர்கள் இருவர் பணியிட மாற்றம்

கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தின் இரண்டு உதவி ஆய்வாளர்கள் குற்றச்சாட்டுகள் காரணமாக பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.


Coimbatore: கோவை சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் குற்றப் புலனாய்வு பிரிவில் பணியாற்றி வந்த இரண்டு உதவி ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நடவடிக்கை அவர்கள் மீது எழுந்துள்ள பல்வேறு குற்றச்சாட்டுகளை அடுத்து எடுக்கப்பட்டுள்ளது.

சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் குற்றப் புலனாய்வு பிரிவில் உதவி ஆய்வாளராக பார்வதி மற்றும் சிறப்பு உதவி ஆய்வாளராக யூசுப் ஆகியோர் பணியாற்றி வந்தனர். இவர்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்த இரண்டு அதிகாரிகளையும் கோவை மாநகர காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மாற்றம் செய்து மாநகர காவல் ஆணையர் வே.பாலகிருஷ்ணன் ஜூலை 29 அன்று உத்தரவிட்டார்.

இந்த இரண்டு அதிகாரிகள் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருவதாக மாநகர காவல் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், விசாரணை முடிந்த பின்னர் இரு அதிகாரிகள் மீதும் அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர்கள் கூறினர்.

Newsletter

அவிநாசி: ‘ரோடு ஷோ’ மூலம் எல்.முருகனுக்கு ஆதரவு திரட்டிய மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ்..!

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தொகுதியில் பாஜக வேட்பாளர் எல்.முருகனை ஆதரித்து மத்திய பிரதேச முதலமைச்சர் மோகன் யாதவ், ரோடு ஷ...

கிணத்துக்கடவில் செந்தில் வேல் பரப்புரை - சபரி கார்த்திகேயனுக்கு வாக்கு சேகரித்தார்..!

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் கே.வி.கே.எஸ். சபரி கார்த்திகேயனை ஆதரித்து பத்திரிக்கையாளரும் தமிழ்கேள்வி யூடியூ...

கோவை மக்கள் ஏப்ரல் 23ஆம் தேதி செந்தில் பாலாஜியின் முகத்திரையை கிழிப்பார்கள்: அண்ணாமலை

கோவை வடக்கு தொகுதியில் பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, திமுக மீது...

வால்பாறை வளர்ச்சிக்கு அதிமுக வாக்குறுதி: வேட்பாளர் லட்சுமண சிங் பல்வேறு அறிவிப்புகள்..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் லட்சுமண சிங், தேர்தலை முன்னிட்டு சுற்றுலா, விவசாயம், தொழில், கல்வி மற்றும் அ...

மூலப்பொருள் விலை உயர்வு: அவசர கால கடன் உதவி வழங்க ரிசர்வ் வங்கி அதிகாரிகளிடம் தொழில்துறையினர் வலியுறுத்தல்

மூலப்பொருட்கள் விலை உயர்வால் ஏற்பட்ட நெருக்கடியை எதிர்கொள்ள கோவையில் நடந்த கலந்துரையாடல் கூட்டத்தில் தொழில்துறையினர் ரிச...

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...