கோவை குறிச்சிபுதூரில் டாஸ்மாக் பார் அமைப்பதற்கு எதிர்ப்பு: பொதுமக்கள் பிளக்ஸ் பேனர் வைத்து போராட்டம்

கோவை குறிச்சிபுதூரில் டாஸ்மாக் பார் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் பிளக்ஸ் பேனர் வைத்து போராட்டம் நடத்தினர். அமைச்சர் மகேஷ், மாவட்ட கலெக்டர் அலுவலகம், சுந்தராபுரம் போலீஸ் நிலையத்தில் மனு அளித்தனர்.


Coimbatore: கோவை கந்தராபுரம் அருகே உள்ள எல்.ஐ.சி. காலனி பகுதியில் அமைந்துள்ள குறிச்சிபுதூரில் டாஸ்மாக் பார் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் நிறைந்த இப்பகுதியில் மதுபான கடை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், டாஸ்மாக் பார் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் அமைச்சர் மகேஷிடம் மனு அளித்தனர். அதுமட்டுமின்றி, மாவட்ட கலெக்டர் அலுவலகம் மற்றும் சுந்தராபுரம் காவல் நிலையத்திலும் மனு அளித்தனர்.

இதன் தொடர்ச்சியாக, தங்களது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் பொள்ளாச்சி சாலையிலிருந்து குறிச்சிபுதூர் பகுதிக்கு செல்லும் சாலையின் துவக்கம் மற்றும் உட்பகுதியில் உள்ள நான்கு இடங்களில் பொதுமக்கள் பிளக்ஸ் பேனர்களை வைத்து தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

குடியிருப்பு பகுதி மற்றும் தொழிற்சாலைகள் அமைந்துள்ள இடத்தில் மதுபான கடை அமைப்பதால் ஏற்படக்கூடிய சமூக சீர்கேடுகளை தடுக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது. இந்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...