ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் நெடுங்குன்று பழங்குடியினர் கிராமத்தில் ஆய்வு

ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவ் தேஜா IFS நெடுங்குன்று பழங்குடியினர் கிராமத்தில் சாலை அமைப்பு சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தார். மனித-விலங்கு மோதல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் விவாதித்தார்.



கோவை: ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் பார்கவ் தேஜா IFS அவர்கள் இன்று நெடுங்குன்று பழங்குடியினர் கிராமத்திற்கு விஜயம் செய்தார். இந்த விஜயத்தின் போது, கிராமத்திற்கு செல்ல சாலை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்தார்.

நெடுங்குன்றில் வசிக்கும் பழங்குடியின மக்களுக்கு, இரவு நேரங்களில் மனித-விலங்கு மோதலை தவிர்க்க வேண்டி, குறுக்குவழிகளைத் தவிர்த்து வீடுகளுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார். இது அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முக்கிய நடவடிக்கையாகும்.



பின்னர், வால்பாறை மற்றும் மானாம்பள்ளி சரகத்தில் மனித-விலங்கு மோதலைக் கட்டுப்படுத்த அமைக்கப்பட்டுள்ள SMART VIRTUAL FENCING (ஸ்மார்ட் விர்ச்சுவல் வேலி) அமைப்புகளை ஆய்வு செய்தார். இந்த தொழில்நுட்பத்தின் முக்கியத்துவம் மற்றும் பயன்பாடு குறித்து பொதுமக்களுக்கு விளக்கினார். மேலும், இது தொடர்பான மக்களின் கருத்துக்களையும் (feedback) கேட்டறிந்தார்.



வால்பாறை மற்றும் மானாம்பள்ளி பகுதிகளில் வலசை யானைகளின் வருகை தொடங்கியுள்ளதால், மக்கள் இரவு நேரங்களில் பாதுகாப்பாக இருக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தினார். மனித-விலங்கு மோதலைக் கட்டுப்படுத்த வனத்துறையுடன் ஒத்துழைக்குமாறு பொதுமக்களை கேட்டுக் கொண்டார்.

Newsletter

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...

கரூர் தேர்தல் களத்தில் பரபரப்பு: செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு..!

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 7 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று கா...

“எடப்பாடி சொல்வது போல யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு இல்லை” - காங்கேயத்தில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின...

கோவை வடக்கில் வானதிக்கு ஆதரவாக BJP மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தீவிர பரப்புரை

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஓணாம்பாளையத்தில் இன்று பரப்பு...