கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 78-ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 78-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. முதன்மைச் செயலர் க.முருகையா தேசியக்கொடியை ஏற்றினார். துணைவேந்தர் ப.வெங்கடாசலபதி சிறப்புரையாற்றினார். கற்பகம் சேவா விருது வழங்கப்பட்டது.


Coimbatore: கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் நாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயலர் க.முருகையா தேசியக்கொடியை ஏற்றிவைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

விழாவில் சிறப்புரையாற்றிய துணைவேந்தர் முனைவர் ப.வெங்கடாசலபதி, சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட பெரியோர்களின் தியாகம் என்றும் போற்றத்தக்கது என்று குறிப்பிட்டார். மேலும், அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தைப் பேணுகின்ற வகையில் நாட்டுப்பற்றும், சமுதாயப் பொறுப்புணர்வும் கொண்டு இளைஞர்கள் சிறந்த குடிமக்களாக விளங்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.



விழாவில் பதிவாளர் முனைவர் சு.இரவி முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில், மத்திய மக்கள் தொடர்பகத்தின் கள விளம்பரத்துறை அலுவலர், கோயம்புத்தூர் எஸ்.ஆர்.சந்திரசேகரனுக்கு அவரது சிறந்த சேவைக்காக கற்பகம் சேவா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.



இவ்விழாவில் கல்லூரியின் முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். சுதந்திர தின கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெற்றன.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...