கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 78-ஆவது சுதந்திர தின விழா கொண்டாட்டம்

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 78-ஆவது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. முதன்மைச் செயலர் க.முருகையா தேசியக்கொடியை ஏற்றினார். துணைவேந்தர் ப.வெங்கடாசலபதி சிறப்புரையாற்றினார். கற்பகம் சேவா விருது வழங்கப்பட்டது.


Coimbatore: கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் நாட்டின் 78-ஆவது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில், கற்பகம் கல்வி நிறுவனங்களின் முதன்மைச் செயலர் க.முருகையா தேசியக்கொடியை ஏற்றிவைத்து மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.

விழாவில் சிறப்புரையாற்றிய துணைவேந்தர் முனைவர் ப.வெங்கடாசலபதி, சுதந்திரத்துக்காகப் பாடுபட்ட பெரியோர்களின் தியாகம் என்றும் போற்றத்தக்கது என்று குறிப்பிட்டார். மேலும், அரும்பாடுபட்டு பெற்ற சுதந்திரத்தைப் பேணுகின்ற வகையில் நாட்டுப்பற்றும், சமுதாயப் பொறுப்புணர்வும் கொண்டு இளைஞர்கள் சிறந்த குடிமக்களாக விளங்கவேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.



விழாவில் பதிவாளர் முனைவர் சு.இரவி முன்னிலை வகித்தார். இந்நிகழ்வில், மத்திய மக்கள் தொடர்பகத்தின் கள விளம்பரத்துறை அலுவலர், கோயம்புத்தூர் எஸ்.ஆர்.சந்திரசேகரனுக்கு அவரது சிறந்த சேவைக்காக கற்பகம் சேவா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது.



இவ்விழாவில் கல்லூரியின் முதன்மையர்கள், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். சுதந்திர தின கொண்டாட்டங்கள் உற்சாகமாக நடைபெற்றன.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...