கோவை குழந்தைக்கு ரூ.16 கோடி மருத்துவ செலவு: அரசு உதவி கோரி அமைச்சர்களை சந்தித்த பெற்றோர்

கோவை சிந்தாமணி புதூரைச் சேர்ந்த சுரேஷ் தம்பதியினரின் குழந்தைக்கு ரூ.16 கோடி மருத்துவ செலவு தேவைப்படுவதால், அரசின் உதவியை நாடி அமைச்சர்களை சந்தித்துள்ளனர். இந்த விவகாரம் முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது.


Coimbatore: கோவை சிந்தாமணி புதூரைச் சேர்ந்த சுரேஷ் தம்பதியினரின் குழந்தைக்கு மருத்துவ செலவுக்காக ரூ.16 கோடி தேவைப்படுவதால், பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். பொதுமக்களிடமிருந்து முடிந்தவரை உதவிகள் கிடைத்தாலும், அது போதுமானதாக இல்லை.

இந்நிலையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் R.முத்தரசன் அவர்களை கடந்த 21.08.2024 அன்று நேரில் சந்தித்து பேசினர். இதையடுத்து, முத்தரசன் சுகாதார அமைச்சரை 24.08.2024 அன்று நேரில் சந்தித்து விவரங்களைத் தெரிவித்துள்ளார். சுகாதார அமைச்சர், குழந்தையை அழைத்து வந்து முழுமையாகப் பரிசோதனை செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளார்.



இதே போல், இன்று கோவை மாவட்டப் பொறுப்பு அமைச்சரையும் குழந்தையின் பெற்றோர் நேரில் சந்தித்துள்ளனர். மாவட்டப் பொறுப்பு அமைச்சர், இந்த விவகாரத்தை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாக உறுதியளித்துள்ளார்.

இந்த முயற்சிக்கு முழுமையாக ஒத்துழைத்த மாநில, மாவட்டப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் குழந்தையின் பெற்றோர் நன்றி தெரிவித்துள்ளனர். அரசின் உதவியுடன் குழந்தைக்கு விரைவில் சிகிச்சை அளிக்கப்படும் என்ற நம்பிக்கை எழுந்துள்ளது.

Newsletter

சேப்பாக்கம் வெற்றியை விட, கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: உதயநிதி ஸ்டாலின்

கோவையில் பிரச்சாரம் செய்த துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு மற்றும் வடக்கு த...

சேப்பாக்கம் வெற்றியை விட கோவை தெற்கு, வடக்கு வெற்றியே முக்கியம்: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

கோவையில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கத்தில் தனது வெற்றியை விட கோவை தெற்கு...

தீரன் சின்னமலையின் 271வது பிறந்தநாளை முன்னிட்டு அவிநாசி திமுக வேட்பாளர் Dr. கோகிலாமணி மரியாதை..!

சுதந்திரப் போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளை முன்னிட்டு, அவிநாசி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின...

உடுமலையில் திமுகவினர் மீது தேர்தல் பொதுப் பார்வையாளரிடம் அதிமுக வழக்கறிஞர்கள் புகார்..!

உடுமலையில் இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பரப்புரைக்காக, அனுமதி வழங்கப்பட்ட இடத்தில் பிரச்சாரம் நடத்தாமல்,...

தேர்தலுக்கு பிறகு ‘மொத்த தோல்வி பழனிச்சாமி’ ஆக மாறுவார்: பொள்ளாச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்..!

உடுமலை, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதசார்பற்ற கூட்டணியின் வேட்பாளர்களை ஆதரித்து, பொள்ளாச்சி அரு...

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...