விநாயகர் சதுர்த்தி: மேட்டுப்பாளையத்தில் மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் ஆய்வு

மேட்டுப்பாளையத்தில் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான ஏற்பாடுகளை மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் ஆய்வு செய்தார். பொதுக்கூட்டம், சிலை கரைப்பு, ஊர்வலப் பாதைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அவர் கேட்டறிந்தார்.


கோவை: விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தை முன்னிட்டு மேற்கு மண்டல ஐஜி செந்தில் குமார் ஐபிஎஸ் இன்று (செப்டம்பர் 3) மேட்டுப்பாளையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, இந்து முன்னணி சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தை அவர் பார்வையிட்டார். மேலும், விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ள பவானி ஆற்றுப் பகுதியையும், ஊர்வலம் செல்லும் பாதைகளையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின் போது டிஎஸ்பி பாலாஜி, இன்ஸ்பெக்டர் மணிகண்டன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் உடன் இருந்தனர். அவர்களிடம் ஐஜி செந்தில் குமார், விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்தும், முன்னேற்பாடு பணிகள் குறித்தும் விரிவாக கேட்டறிந்தார்.

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டத்தின் போது எந்தவித சம்பவங்களும் நடைபெறாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் காவல்துறை தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ஐஜி செந்தில் குமார் உத்தரவிட்டார். மேலும், மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அவர் காவல்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...