மேட்டுப்பாளையம் அருகே சிறுத்தை நடமாட்டம்: கால்நடைகளை வேட்டையாடுவதால் மக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம் அருகே சென்னாமலை கரடு வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் கால்நடைகளை வேட்டையாடுவதால் மலையடிவார கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனர். வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள சிறுமுகை வனச்சரகத்திற்கு உட்பட்ட சென்னாமலை கரடு பகுதியில் அண்மைக்காலமாக சிறுத்தை நடமாட்டம் அதிகரித்து வருவதால் சென்னா மலை கரடு வனப்பகுதியை ஒட்டியுள்ள கிராம மக்கள் பீதி அடைந்துள்ளனர்.



சென்னா மலை கரடு வனத்தின் அடிவார கிராமமாக உள்ள அறிவொளி நகர், வெள்ளிப்பாளையம், கரட்டுமேடு, மோத்தேபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில மாதங்களாக சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரிக்க துவங்கியுள்ளது. மலை அடிவாரப் பகுதியில் உள்ள விவசாய தோட்டங்கள் மற்றும் கிராமங்களில் ஆடு, மாடு போன்ற கால்நடைகள் வளர்ப்பு அதிகம் உள்ள நிலையில் அதனை குறிவைத்து கால்நடைகளை சிறுத்தைகள் வேட்டையாடி வருகிறது.



கடந்த இரண்டு மாதங்களில் ஆடுகளை வேட்டையாடி தூக்கி செல்வதுடன் பசு மாடுகளை தாக்கி காயம் ஏற்படுத்தியுள்ளது. அறிவொளி நகர் பகுதியை சேர்ந்த துளசியம்மாள் என்பவர் வளர்த்து வந்த கன்று குட்டியை சிறுத்தை தாக்கியதில் அதன் கழுத்து மற்றும் முதுகு பகுதிகளில் பெரிய அளவில் காயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் காவலுக்கு வளர்க்கப்படும் நாய்களையும் இழுத்து சென்றுவிட்டதாக கூறும் அப்பகுதி மக்கள் வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். ஏற்கனவே கடந்த மாதம் வெள்ளிப்பாளையம் கிராமத்தில் சிறுத்தை ஒன்று அந்த பகுதியில் இருந்த விவசாய தோட்டத்தில் நுழைந்த வீடியோ காட்சிகள் வெளியாகி இருந்த நிலையில் அதன் வேட்டை தொடர்வதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே தொடர்ந்து பொதுமக்களையும் கால்நடைகளையும் அச்சுறுத்தி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



இதனையடுத்து மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ் அறிவொளி நகர் பகுதியில் நேற்று இரவு ஆய்வு செய்தார். அப்போது சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகவும் பொதுமக்களை விரட்டி அச்சுறுத்துவதாக புகார் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து மேட்டுப்பாளையம் வனத்துறை அதிகாரிகளை தொடர்பு கொண்ட சட்டமன்ற உறுப்பினர் உடனடியாக சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை எடுக்க அவர் அறிவுறுத்தினார்.

Newsletter

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...