கேரள மீன் கழிவுநீரை பொள்ளாச்சி அருகே கொட்டிய வாகனம் சிறைப்பிடிப்பு

கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன் கழிவுநீர் பொள்ளாச்சி அருகே கோமங்கலம்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் கொட்டப்பட்டது. பொதுமக்கள் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். வாகனம் காவல் நிலையத்தில் சிறைப்பிடிக்கப்பட்டது.



கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள கோமங்கலம்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் கேரளாவில் இருந்து கொண்டு வரப்பட்ட மீன் கழிவுநீர் கொட்டப்பட்டதை தடுத்து நிறுத்தி பொதுமக்கள் போராட்டம் நடத்தினர். சம்பவம் குறித்த விவரம்:

நாகர்கோவில் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் என்பவருக்கு சொந்தமான வாகனத்தில், கோழிக்கோட்டில் இருந்து தூத்துக்குடி பகுதியில் உள்ள எம்பிஎன் என்ற தனியார் நிறுவனத்திற்கு மீன் எண்ணெய் மற்றும் கோழி தீவனம் தயாரிப்பதற்காக மீன் கழிவுநீர் கொண்டு செல்லப்பட்டது. இந்த வாகனத்திலிருந்து மீன் கழிவுநீர் கோமங்கலம்புதூர் தேசிய நெடுஞ்சாலையில் திறந்து விடப்பட்டது.



இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக வாகனத்தை தடுத்து நிறுத்தி, கோமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, வாகனத்தை கைப்பற்றி காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

இந்த சம்பவம் குறித்து கோமங்கலம் பகுதி பொதுமக்கள் கருத்து தெரிவிக்கையில், "கேரளா மாநிலத்தில் இருந்து கோழி இறைச்சி, மருத்துவ கழிவுகள் மற்றும் மீன் கழிவுகள் தமிழக பகுதிகளில் அடிக்கடி கொட்டப்பட்டு வருகின்றன. இது போன்ற நடவடிக்கைகள் சுற்றுச்சூழலுக்கும், மக்களின் ஆரோக்கியத்திற்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது. எனவே, இத்தகைய செயல்களை உடனடியாக தடை செய்ய வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தனர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...