மேட்டுப்பாளையத்தில் 1500 மதரசா மாணவர்கள் பங்கேற்ற மிலாது நபி ஊர்வலம்; இந்து சமுதாய நலச்சங்கம் வரவேற்பு

மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு 1500 மதரசா மாணவர்கள் பங்கேற்ற மிலாது நபி ஊர்வலம் நடைபெற்றது. இந்து சமுதாய நலச்சங்கம் குளிர்பானம் வழங்கி வரவேற்றது.



கோவை: மேட்டுப்பாளையத்தில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி சார்பில் நபிகள் நாயகம் பிறந்தநாளை ஒட்டி 1500 மதரசா பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மிலாது நபி ஊர்வலம் நடைபெற்றது.

இஸ்லாமிய மக்கள் அதிகம் வாழும் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் நபிகள் நாயகம் பிறந்தநாளை முன்னிட்டு அதனை கொண்டாடும் விதமாக மிலாது நபி ஊர்வலம் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் பெரிய பள்ளி வாசல் பகுதியில் இருந்து துவங்கிய இந்த ஊர்வலத்தை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட தலைவர் ஜயூப் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

இதனையடுத்து உதகை சாலை, பேருந்து நிலையம், அண்ணாஜீராவ் சாலை என மேட்டுப்பாளையத்தின் முக்கிய சாலைகளின் வழியாக ஊர்வலமாக வந்த மிலாது நபி ஊர்வலம் வலம் வந்து மீண்டும் பெரிய பள்ளிவாசலில் நிறைவடைந்தது.

60 மதரசா பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் 1500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு "நபிகள் நாயகம் வழி நடப்போம்", "இந்தியா எங்கள் தாய்நாடு", "இஸ்லாம் எங்கள் வழிபாடு" என்ற கோஷங்களை எழுப்பி ஊர்வலமாக வந்தனர்.



இந்த மிலாது நபி ஊர்வலத்தில் கலந்து கொண்டு ஊர்வலம் வந்த இஸ்லாமிய பள்ளி நிர்வாகிகள் மற்றும் குழந்தைகளுக்கு மேட்டுப்பாளையம் இந்து சமுதாய நலச்சங்கத்தின் நிர்வாகிகள் தண்ணீர் பாட்டில்கள், குளிர்பானம் உள்ளிட்டவைகளை வழங்கி வரவேற்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் காலை 11 மணிக்கு 38.62 சதவீதம் வாக்குப்பதிவு; கவுண்டம்பாளையம் முதலிடம்

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026 கோவை மாவட்டத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. காலை 11 மணி நிலவரப்படி 38.62 சதவீத...

கோவையில் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. கோவை மாவட்டத்தில் 10 தொகுதிகளில்...

கோவையில் வாக்குப்பதிவு தொடக்கம்: உற்சாகமாக வாக்களிக்கும் மக்கள்

தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026 வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் கோவை மாவட்டம் முழுவதும் அமைதியான சூழலில் தொடங்கியது....

கோவையில் 3,563 வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

கோவை மாவட்டத்தில் நாளைய சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 3,563 வாக்குப்பதிவு நிலையங்களுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திர...

பொள்ளாச்சியில் 281 வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணி தீவிரம்

நாளை நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, பொள்ளாச்சி தொகுதியில் உள்ள 281 வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்கு இ...

பல ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இல்லை: தேர்தலை புறக்கணிக்க நெறையூர் கிராம மக்கள் முடிவு

குடிநீர், சாலை, போக்குவரத்து, நியாய விலைக்கடை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக வழங்கப்படாததால், திருப்பூர் மாவட்ட...