கோவை அன்னூர் அருகே குற்றவாளி குண்டர் சட்டத்தின் கீழ் கைது

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கோவில் பாளையம் பகுதியில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்ட ரவீந்திரன் என்பவரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.


Coimbatore: கோவை மாவட்டம் அன்னூர் அருகே உள்ள கோவில் பாளையம் பகுதியில் பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.

அண்மையில் கோவில் பாளையம் பகுதியில் கல்லூரி மாணவர்களிடம் வழிப்பறி செய்ததாக ஒரு கும்பல் போலீசாரால் கைது செய்யப்பட்டது. அதில் ரவீந்திரன் என்பவரும் ஒருவர். இவர் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வழிப்பறி மற்றும் கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டு பின்னர் வெளி மாநிலங்களுக்கு தப்பி சென்று பதுங்கி இருந்துள்ளார்.

கடந்த மாதம் கோவில் பாளையம் பகுதியில் வழிப்பறி செய்து விட்டு சிம்லா சென்று பதுங்கி இருந்த ரவீந்திரனை கோவில் பாளையம் போலீசார் அங்கு சென்று கைது செய்து காவல்நிலையம் அழைத்து வந்தனர். அப்போது போலீசிடம் இருந்து தப்ப முயன்று பள்ளத்தில் விழுந்த ரவீந்திரனுக்கு மாவு கட்டு போடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த வழக்கில் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரவீந்திரன் மீது கோவில் பாளையம் போலீசார் தற்போது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த தகவல் சிறையில் உள்ள ரவீந்திரனுக்கு கோப்புகளாக வழங்கப்பட்டுள்ளது.

Newsletter

அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா

கோவை மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அறிவியல் திறனறி தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்க...

அன்னூர் அருகே 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல்; 3 பேர் கைது

அன்னூர் காவல்துறையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 1,453 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதுடன...

கோவை நேரு நகரில் டெங்கு கொசுப்புழு: கட்டிட உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம்

கோவை மாநகராட்சி சுகாதார குழு நேரு நகர் கட்டிடத்தில் டெங்கு கொசுப்புழுக்கள் கண்டறிந்து உரிமையாளருக்கு ரூ.50,000 அபராதம் வ...

கோவை உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் வடிகால் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோயம்புத்தூர் உடையாம்பாளையம் இராஜவாய்க்காலில் மழைநீர் தேங்காமல் வடிவதற்கான பணிகள் குறித்து மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி...

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணை 36.52 அடியாகவும், திருமூர்த்தி அணை 36.39 அடியாகவும் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. நீர் ப...

கோவையில் ஜேசிபி வாகனங்கள் நிறுத்தி எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள் போராட்டம்

புதிய வாகன விலை, எரிபொருள், உதிரி பாகங்கள், காப்பீடு மற்றும் வரி உயர்வை கண்டித்து கோவை மாவட்ட எர்த் மூவர்ஸ் உரிமையாளர்கள...