பொள்ளாச்சி திமுக வேட்பாளருக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் ஆதரவு..!

வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் மதச்சர்பற்ற முற்போக்கு கூட்டணியின்  வேட்பாளர் நித்தியானந்தனுக்கு, முழு ஆதரவு அளிப்பதாக தேவாங்க செட்டியார் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் ஒருமனதாக முடிவு.


Coimbatore: பொள்ளாச்சி-பல்லடம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தேவாங்க செட்டியார் சமூகத்தின் ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது.



இந்தக் கூட்டத்தில் பேசிய தேவாங்க செட்டியார் சமூக பிரதிநிதிகள், கடந்த ஐந்து ஆண்டுகளாக திமுக ஆட்சியில் நெசவாளர்களுக்காக பல்வேறு நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். குறிப்பாக, நெசவாளர்களுக்கு வழங்கப்பட்ட இலவச மின்சாரம் உள்ளிட்ட திட்டங்கள், அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தியுள்ளதாக கூறினர்.

இதனால், வரும் சட்டமன்றத் தேர்தலில் பொள்ளாச்சி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் நித்தியானந்தனுக்கு தேவாங்க செட்டியார் சமூகத்தினர் முழு ஆதரவு அளிப்பதாக கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது.



மேலும், திமுக வேட்பாளருக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட உள்ளதாக தெரிவித்த அவர்கள், இந்த முறை திமுகவின் வெற்றிச் சின்னமான உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களிக்க உள்ளதாகவும் உறுதியளித்தனர்.

திமுக மாநில நெசவாளர் அணி துணை அமைப்பாளர் நாகராஜ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தொகுதி திமுக பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர் நித்தியானந்தன், நகர்மன்ற தலைவர் சியாமளா, பொள்ளாச்சி வடக்கு நகர செயலாளர் நவநீதகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் தேவாங்க செட்டியார் சமூகத்தைச் சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர்.


Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...