கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா, IAS பொறுப்பேற்பு

கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள கட்டா ரவி தேஜா, IAS, இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் 30-வது ஆணையாளராக பொறுப்பேற்றார். சிவகுரு பிரபாகரன், IAS பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து இந்த நியமனம் அறிவிக்கப்பட்டுள்ளது.


கோவை: தமிழ்நாடு அரசின் சமீபத்திய IAS அதிகாரிகள் பணியிட மாற்றம் மற்றும் பதவி உயர்வு உத்தரவின் அடிப்படையில் கோவை மாநகராட்சியின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்ட கட்டா ரவி தேஜா, IAS இன்று மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் கோவை மாநகராட்சியின் 30-வது ஆணையாளராக பதவியேற்றுள்ளார்.

கோவை மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி வந்த M சிவகுரு பிரபாகரன், IAS, பதவி உயர்வு பெற்று ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, அவரது இடத்தில் கட்டா தேஜா ரவி நியமிக்கப்பட்டுள்ளார். இன்று நடைபெற்ற பொறுப்பேற்பு நிகழ்ச்சியில் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் பங்கேற்றனர்.

தமிழகம் முழுவதும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாக திறனை மேம்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்டுள்ள நிர்வாக மாற்றத்தின் ஒரு பகுதியாக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புதிய ஆணையாளர் கட்டா தேஜா ரவி , நகர வளர்ச்சி மற்றும் நகர்ப்புற சேவைகளை மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

கோவை மாநகராட்சி புதிய ஆணையாளர் கட்டா ரவி தேஜாவை வாழ்த்திய மேயர்

கோயம்புத்தூர் மாநகராட்சியின் புதிய ஆணையாளராக கட்டா ரவி தேஜா IAS இன்று பொறுப்பேற்றார். மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன்...

உலகப் புகையிலை ஒழிப்பு தினம்: கோவையில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்பு மற்றும் விழிப்புணர்வு பேரணி

உலகப் புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி கோவை ராயல் கேர் நர்சிங் கல்லூரியில் மாவட்ட புகையிலை கட்டுப்பாட்டு மையம் மற்றும் CSW...

உலக புகையிலை எதிர்ப்பு தினம்: ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

உலக ‘46 நண்பர்கள் சமூக சேவை அறக்கட்டளை’ மற்றும் சுமதி மருத்துவமனை இணைந்து நடத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சியில், பெரியநாயக...

சூலூர் சிறுமி வழக்கு: குற்றவாளிகளை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை மற்றும் கொலை வழக்கில் கைதான கார்த்திக், மோகன்ராஜை மூன்று நாட்கள் காவல...

கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் நியமனம்

முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக அரசு அனைத்து மாவட்டங்களுக்கும் பொறுப்பு அமைச்சர்களை நியமித்துள்ளது. அதன்படி கோவை மாவட்டத...

"தலைவா ஆணையிடு": அண்ணாமலைக்கு ஆதரவாக கோவையில் ரஜினி ரசிகர் மன்ற போஸ்டர்கள்

பாஜகவிலிருந்து அண்ணாமலை விலகிய நிலையில், கோவையில் ரஜினிகாந்த் ரசிகர் நற்பணி மன்றம் என்று குறிப்பிட்டு "தலைவா ஆணையிடு! அ...