கோவை பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் போஸ்டர் அகற்றும் பணி - கவுன்சிலர் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில் போஸ்டர் அகற்றும் பணி நடைபெற்றது. வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் பார்வையிட்டு, பொதுமக்களுக்கு இடையூறு இன்றி பணி முடிக்க அறிவுறுத்தினார். சிருங்கார் நகர் பகுதியில் சாக்கடை சுத்தம் செய்யும் பணியும் ஆய்வு செய்யப்பட்டது.


Coimbatore: கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27-க்குட்பட்ட சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு அவிநாசி பிரதான சாலையில் இன்று காலை போஸ்டர்கள் அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. மாநகராட்சி ஆணையாளர் கட்டா ரவி தேஜா இ.ஆ.ப., உத்தரவின் பேரில் இப்பணி நடைபெற்றது.






வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் நேரில் சென்று பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பொதுமக்களுக்கும் வாகன ஓட்டிகளுக்கும் எவ்வித இடையூறும் இல்லாதவாறு, சுத்தம் செய்யப்பட்ட போஸ்டர்கள் அனைத்தையும் உடனடியாக அப்புறப்படுத்துமாறு வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரிடம் அறிவுறுத்தப்பட்டது.



இதேபோல், சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண் 27 பீளமேடு சிருங்கார் நகர் பகுதியில் சாக்கடை மற்றும் சாலையோரத்தில் உள்ள செடிகள் சுத்தம் செய்யும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.



இதை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். சாக்கடை மற்றும் சாலையோரத்தில் உள்ள செடிகள் முழுவதும் முழுமையாக சுத்தம் செய்யுமாறு தூய்மை பணியாளரிடம் கூறினார். இப்பணியில் வார்டு சூப்பர்வைசர் ஈஸ்வரி உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...

‘யாத்ரி சுவிதா திவஸ் 2026’ கொண்டாட்டம்: பயணிகள் சேவையில் அர்ப்பணிப்பை வெளிப்படுத்திய கோவை விமான நிலையம்

கோவை சர்வதேச விமான நிலையத்தில் யாத்ரி சுவிதா திவஸ் 2026 முன்னிட்டு கலாச்சார நிகழ்ச்சிகள், சுகாதார முகாம்கள், ரத்ததானம்,...

முத்தண்ணன்குளம் Turf மைதானத்துக்கான தனியாருடனான ஒப்பந்தத்தை மாநகராட்சி ரத்து செய்ய வேண்டும்: DYFI வலியுறுத்தல்

கோவை மாநகராட்சி சார்பில் ரூ.60 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட முத்தண்ணன்குளம் Turf மைதான தனியார் நிறுவனத்திடம் செய்த ஒப்பந்...

50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகள் ஆய்வு: ரூ.40 ஆயிரம் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த ஆர்.எஸ்.புரம் போலீசார்..!

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் உள்ள கனரா வங்கி அருகே தவறவிட்ட ரூ.40 ஆயிரத்தை, 50-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை ஆய்வு...

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக பணியாற்றியவர்களுக்கு மாநில விருதுகள்: விண்ணப்பங்கள் வரவேற்பு

மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக பணியாற்றிய தனிநபர்கள், தொண்டு நிறுவனங்கள், மருத்துவர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு த...