சுற்றுச்சூழல் மற்றும் வனத்தை பாதுகாக்க விழிப்புணர்வு பயணம் மேற்கொண்டுள்ள கோவையின் சுற்றுசுழல் ஆர்வலர்கள்.


வனம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கோவையை சேர்ந்த சுற்றுசுழல் ஆர்வலர்கள் பல்வேறு மாநிலங்களில் வழியாக 60 நாட்கள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.

கோவையில் உள்ள சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பு சார்பில் வனம் மற்றும் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் பல்வேறு அமைப்பினர் சேவைகள் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் வனத்தின் பாதுகாப்பு மற்றும் அதன் அவசியம், விலங்குகளை பாதுகாப்பதன் அவசியம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் காரிலேயே இந்தியா, நேபால், பூட்டான், பங்களாதேஷ், பர்மா உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு கோவையை சேர்ந்த நான்கு சுற்றுசுழல் ஆர்வலர்கள் 29 மாநிலங்கள் வழியாக பயணம் மேற்கொள்ள உள்ளனர்.

மொத்தம் 28 ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்திற்கு காரிலேயே சென்று பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளனர். மொத்தம் அறுபது நாட்களுக்கு பயணம் மேற்கொள்ள உள்ள இவர்கள் காடுகள் வழியாக தங்களது பயணத்தை மேற்கொள்ள உள்ளனர். கோவையில் உள்ள வனக்கல்லூரியில் இருந்து இன்று இவர்கள் பயணத்தை துவங்கினர்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...