நிதீஷ்குமார், பாஜக இடையேயான புதிய கூட்டணி மக்களின் தீர்ப்பிற்கு எதிரானது வெல்ஃபேர் பார்ட்டியின் தேசியத்தலைவர் குற்றச்சாட்டு

பீகார் மாநில முதல்வர் நிதீஷ்குமார், பாஜக இடையே ஏற்பட்டுள்ள புதிய கூட்டணியை வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியா கடுமையாக விமர்ச்சித்துள்ளது. புதிய அரசு உருவாக்கம் மக்களின் தீர்ப்பிற்கும் அரசியல் விழுமங்களுக்கும் எதிரானதாகும் என வெல்ஃபேர் பார்ட்டியின் தேசியத்தலைவர் SQR இல்யாஸ் அறிக்கையில் தெரிவித்தார். மேலும், மக்களின் தீர்ப்பிற்கு நிதீஷ்-மோடி கூட்டணி மக்களின் தீர்ப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். 

"சங்பரிவார் சித்தாந்தங்களுக்கு எதிரான, வலிமையான மதச்சார்பற்ற கூட்டணி என்ற அடிப்படையில்தான் பீகாரில் ஆர்ஜெடி- ஜெடியூ- காங்கிரஸ் மகா கூட்டணியை மக்கள் வெற்றி பெறச் செய்தனர். இவ்வெற்றியானது நாடு முழுவதும் உள்ள மதச்சார்பற்ற சக்திகளுக்கு நம்பிக்கை ஊட்டியது. இந்த புனிதமற்ற கூட்டணியை உருவாக்குவதற்கு முன்பாக குறைந்த பட்சம் அவர் தனது கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களிடமாவது கருத்து கேட்டிருக்க வேண்டும். அதிகாரத்திற்கு முன்னால் நிதீஷ்குமார் எவ்வித கொள்கைகளோ விழுமங்களோ இல்லாத நபர்தான் என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்திருக்கிறார். 

லாலுவிற்கும் அவரது மகன் தேஜஸ்விற்கும் எதிராக எழுந்த ஊழல் ஓலங்கள் எல்லாம் அரசியல் நாடகத்தின் ஒரு பகுதிதான் என்பது புகை மறைவின்றி நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆளுநர் பதவி அரசியல் மேடையில் பயன்படுத்தப்படும் ஒரு உபகரணம் மட்டும்தான் என்பதை பாட்னாவில் நடந்தேறிய சம்பவங்கள் மீண்டும் ஒரு முறை நிரூபணமாகியுள்ளது. பீகாரின் ஆளுநர் அரசியல் அமைப்புச் சட்டத்தின் கண்ணியத்தையை களங்கப்படுத்தியுள்ளார்." என அவர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும், புதிய கூட்டணியை குறித்து மக்களின் கருத்துக்களை கேட்க வேண்டும் எனவும் முனைவர் SQR இல்யாஸ் தனது அறிக்கையின் வாயிலாக வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...