எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா கொண்டாடுவது நீலகிரி ஆட்சியர் தலைமையில் ஆலோசனைக் கூட்டம்


நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலத்தில் இன்று (ஜூலை 30) மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில், ராஜ்யசபா உறுப்பினர் கே.ஆர்.அர்ஜுணன், பாராளுமன்ற உறுப்பினர் சி.கோபாலகிருஸ்ணன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் முன்னிலையில் வரும் செப்டம்பர் 11ம் தேதியன்று நடைபெறவுள்ள பாரத ரத்னா எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழா கொண்டாடுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அனைத்துத்துறை அலுவலர்களுடன் நடைபெற்றது.



ஆலோசனைக் கூட்டத்தில் பாரத ரத்னா எம்.ஜி.ஆர்-யின் நூற்றாண்டு விழாவினை மிகச் சிறப்பாக கொண்டாடுவது தொடர்பாகவும், துறைச் சார்ந்த அலுவலர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள பணிகள் குறித்தும், அதற்கான கோப்புகளை விரைவில் சமர்ப்பிக்குமாறும் மாவட்ட ஆட்சியர் கேட்டுக் கொண்டார்.



முன்னதாக உதகை ஸ்ரீ சாந்தி விஜய் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சிறப்பு சாதனை விளக்கப் புகைப்படக்கண்காட்சியினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.



அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பெறும் வகையிலான மாபெரும் மருத்துவ முகாமினை மாவட்ட ஆட்சியர் தொடங்கி வைத்தார்.



இம்முகாமில் சிறப்பு மருத்துவர்களாக இருதய நோய் நிபுணர், பல் பரிசோதனை நிபுணர், கண் பரிசோதனை நிபுணர் மற்றும் பொது நல மருத்துவர்கள் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பரிசோதனை செய்தனர். இம்முகாமில் ஏறக்குறைய 500-க்கும் மேற்பட்ட பயனாளிகள் பயன்பெற்றனர்.

இந்நிகழ்ச்சிகளில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (பொ) பாண்டியராஜன், மாவட்ட வருவாய் அலுவலர் தெ.பாஸ்கரபாண்டியன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...