கோவை மாவட்ட விடுதிகள் அரசு நெறிமுறை சான்று பெற ஆட்சியர் அழைப்பு


கோவை மாவட்டத்தில் விடுதிகளில் தங்கி பணிபுரியும் அல்லது கல்வி பயிலும் பெண்கள், வளர் இளம் பெண்கள், பெண் குழந்தைகள் மற்றும் சிறார் இல்லங்கள் அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி (உள்ளுறைவோர்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு நலனுக்கு அரசு வழிகாட்டி நெறிமுறைகள் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஒழுங்குமுறைச் சட்டம் 2014)-யின் கீழ் பதிவு செய்து சான்று பெற்றிட ஏற்கனவே அழைப்பு விடப்பட்டிருந்தது.

அதில் பதிவு செய்யாதவர்களுக்கென வாய்ப்பளிக்கும் வகையில் மீண்டும் பதிவு செய்திட கால அவகாசம் வழங்கப்படுகிறது. இதுபோன்று கோவை மாவட்டத்தில் செயல்படும் விடுதிகள், பதிவு செய்வதற்கான விண்ணப்ப படிவம் கோவை மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் பழைய கட்டிடம், தரைத்தளம், கோவை - 18 என்ற முகவரியில் நேரில் பெற்று வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும், இதில் பதிவு செய்ய கருத்துரு சமர்ப்பிக்காத அனைத்து விடுதிகளின் மீதும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று கோவை மாவட்ட ஆட்சியர் வேளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...