ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் கூட்டம்

கோவை மாவட்டம், ஆர்.எஸ்.புரம் உழவர் சந்தையில் விவசாயிகள் மற்றும் நுகர்வோர் கூட்டம் இன்று வேளாண்மை துணை இயக்குநர் எம்.ஆர்.பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திரளான விவசாயிகள் மற்றும் நுகர்வோர்கள் கலந்துகொண்டனர்.



இதனைத்தொடர்ந்து, வேளாண்மை துணை இயக்குநர் எம்.ஆர்.பழனிசாமி பேசுகையில், உழவர் சந்தைக்கான அடையாள அட்டை பெறுதல் மற்றும் வழிகாட்டு நெறிமுறைகள் குறித்து விவசாயிகளுக்கு தெரிவித்து விவசாயிகள் விளைவிக்கும் விளைபொருட்களை உழவர் சந்தையின் மூலம் விற்பனை செய்ய கேட்டுக்கொண்டார்.

உழவர் சந்தையில் விவசாயிகளுக்கு எழும் பிரச்சனைகள் குறித்து விவசாயிகள் மருதாசல மூர்த்தி, வேலுநாயக்கர், ராமசாமி, சக்திவேல் ஆகியோர் தெரிவித்தனர். அதற்கான தீர்வு முறைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.



தொடர்ந்து, விவசாயிகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனைகளை தீர்க்கவும் நிர்வாக இடர்பாடுகளை களையவும் புகார் பெட்டி வைக்க அலோசனை வழங்கப்பட்டது.

இக்கூட்டத்தில், வேளாண்மை அலுவலர் த.கண்ணன், நிர்வாக அலுவலர் கு.அன்னபூரணி மற்றும் உதவி நிர்வாக அலுவலர்கள் ராஜசேகரன், கவிபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...