கோவை ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவறை கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் திடீர் ஆய்வு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள பதிவறை கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையர் உள்ளிட்டோர் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.



கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய சுதந்திரத்திற்கு முன்பான காலத்தில் இருந்து தற்போது வரையிலான பல்துறை ஆவணங்கள் பாதுகாக்கப்பட்டு வருகிறது. தற்போது புதிய கட்டிடத்திற்கு பதிவறை மாற்றப்படும் பணிகளில் ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் பழைய பதிவறை கட்டிடத்தை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் மற்றும் மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் ஆகியோர் திடீரென நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பழைய ஆவணங்கள் தொடர்பாகவும் அவர்கள் பதிவறை ஊழியர்களிடம் கேட்டறிந்தனர்.

மாநகர காவல் துறை சார்பில் காவலர்கள் கிளப் ஹேமில்டன் கிளப் என்னும் பெயரில் இரயில் நிலையம் முன்பாக செயல்பட்டு வருகிறது. புணரமைக்கப்பட்டுள்ள இக்கட்டிடத்தில் அமைக்கப்பட உள்ள அருங்காட்சியகத்திற்கு ஆவணங்களின் நகல்களை எடுத்து செல்வது தொடர்பாக இந்த ஆய்வு நடைபெற்றதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...