பராமரிப்புப் பணிகள் காரணமாக சேலம் ஜோலார்பேட்டை மார்க்கத்தில் ரயில் சேவையில் மாற்றம்

ஆகஸ்ட் 11 இன்று முதல் செப்டம்பர் 13-ஆம் தேதி வரை சேலம் ஜோலார்பேட்டை மார்க்கத்தில் ரயில் தடப்பராமரிப்புப் பணிகள் காரணமாக ரயில்கள் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என சேலம் ரயில்வே கோட்டம் அறிவித்துள்ளது.

சேலம் ஜோலார்பேட்டை மார்க்கத்தில் காகங்கரை- சாமல்பட்டி மற்றும் திருப்பத்தூர்- காகங்கரை ரயில் நிலையங்களுக்கிடையே இன்று முதல் (ஆகஸ்ட் 11) முதல் செப்டம்பர் 13ம் தேதி வரை ரயில் தடப்பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதன் காரணமாக சேலம் கோட்டம் வழியாக செல்லும் ரயில்கள் இயக்கத்தில் கீழ்க்கண்ட மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. பயணிகள் இதை கவனத்தில் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

13.8.17, 20.8.17, 27.8.17, மற்றும் 03.9.17 ஆகிய ஞாயிற்றுக் கிழமைகளில் ரயில் எண் 07115 ஹைதராபாத் கொச்சுவேளி சிறப்பு ரயில் 23 நிமிடங்கள் தாமதமாகவும், 10.9.17 அன்று 15 நிமிடங்கள் தாமதமாகவும் சென்றடையும்.

15.8.17, 22.8.17, மற்றும் 29.8.17 ஆகிய செவ்வாய் கிழமைகளில் ரயில் எண் 22815 பிலாஸ்பூர் எர்ணாகுளம் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரயில் 40 நிமிடங்கள் தாமதமாகவும், 05.9.17 மற்றும் 12.9.17 ஆகிய செவ்வாய் கிழமைகளில் 25 நிமிடங்கள் தாமதமாகவும் சென்றடையும்.

16.8.17, 23.8.17, மற்றும் 30.8.17 ஆகிய புதன்கிழமைகளில் ரயில் எண் 22619 பிலாஸ்பூர் திருநெல்வேலி எக்ஸ்பிரஸ் 20 நிமிடங்கள் தாமதமாகவும், 06.9.17 மற்றும் 13.9.17 ஆகிய தேதிகளில் 15 நிமிடங்கள் தாமதமாகவும் சென்றடையும்.

17.8.17, 24.8.17, 31.8.17 மற்றும் 07.9.17 ஆகிய விழாக்கிழமைகளில் ரயில் எண் 12970, ஜெய்பூர் கோயம்பத்தூர் அதிவிரைவு எக்ஸ்பிரஸ் 33 நிமிடங்கள் தாமதமாகவும், ரயில் எண் 16360 பாட்னா- எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் ரயில் 10 நிமிடங்கள் தாமதமாக சென்றடையும்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...