தமிழ்நாடு வேளாண் பல்கலையில் உலக தேனீ தினம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் தேசிய தேனீ வாரியத்தின் துணையோடு சிறப்பான முறையில் உலக தேனீ தினம் வரும் ஆகஸ்ட் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் இருந்து தேனீ வளர்ப்பவர்கள் தாங்கள் உற்பத்தி செய்த பல்வேறு வகை தேன், தேனீ பெட்டிகள் மற்றும் தேனீ வளர்ப்பு உபகரணங்கள் ஆகியவற்றை பொதுமக்கள் பார்வைக்கும் விற்பனைக்கும் தரும் வகையில் அரங்குகள் ஏற்பாடு செய்யப்படும். 

மேலும், பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களின் தேனீ வளர்ப்பு குறித்த கண்காட்சிகள் வைக்கப்பட்டு கலை நிகழ்ச்சிகளும் நடக்கவிருக்கின்றன. காலை மணி 9 முதல் மாலை 5 மணி வரை நடை பெறவிருக்கும் இவ்விழாவில், பங்கேற்க விவசாயிகளும் பொது மக்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். நுழைவு கட்டணம் ஏதும் இல்லை.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...