கோவை மாநகராட்சி சார்பில் 71-வது சுதந்திர தின விழா பல்வேறு கலைநிகழ்ச்சிகளுடன் கொண்டாட்டம்

கோவை மாநகராட்சியில் நடைபெற்ற 71-வது சுதந்திர தின விழாவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தேசியக்கொடியை ஏற்றி வைத்து அப்பழுக்கின்றி பணியாற்றிய பணியாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கினார்.

கோவை மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 15) 71-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் கலந்துகொண்டு தேசியக்கொடி ஏற்றி வைத்தார். 

முன்னதாக அண்ணல் காந்தியடிகளின் உருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். 



இவ்விழாவில் கோவை மாநகராட்சியில் 25 ஆண்டுகள் அப்பழுக்கின்றி பணியாற்றிய 14 பணியாளர்களுக்கு தலா ரூ.2,000 வெகுமதி தொகையும் நற்சான்றிதழ்களையும் வழங்கினார். 



இவ்விழாவில் ஆர்.எஸ்.புரம் எஸ்.ஆர்.பி.அம்மணியம்மாள் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் ஆர்.எஸ்.புரம் மேற்கு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகளின் சிறப்பான கலை நிகழ்ச்சிகளும், மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மற்றும் துவக்கப்பள்ளிகளைச் சேர்ந்த மாணவ மாணவியர்களின் களரி விளையாட்டு மற்றும் பிற வீரசாகச நிகழ்ச்சிகளும் நடைபெற்றது. 



இவ்விழாவில் துணை ஆணையர் ப.காந்திமதி, மாநகராட்சி அலுவலர்கள், மாநகராட்சி பணியாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பலர்  கலந்து கொண்டனர்.

Newsletter

போத்தனூரில் காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது

கோவை போத்தனூர் காவல் நிலையம் சார்பில் நடைபெற்ற காவல்துறையினருக்கான இலவச கண் பரிசோதனை மற்றும் கண் பாதுகாப்பு விழிப்புணர்வ...

பட்டுப்புழு வளர்ப்பு சான்றிதழ் படிப்பு விழா மேட்டுப்பாளையத்தில் நடைபெற்றது

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பட்டுப்புழு வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் சான்றிதழ் படிப்பின் சான்றிதழ் வழங்கும் மற...

முள்ளிவாய்க்கால், ஸ்டெர்லைட் உயிரிழப்புகளுக்கு அரசு மரியாதை வேண்டும் - கோவை ஐடி ஊழியர் மனு

கோவை மாவட்ட ஆட்சியரிடம் வீரகேரளம் பகுதியைச் சேர்ந்த ஐடி ஊழியர் அரவிந்த் மனு அளித்துள்ளார். முள்ளிவாய்க்கால் மற்றும் ஸ்டெ...

TNAU-வில் வேளாண் ஏற்றுமதி குறித்த இரு நாள் பயிற்சி: விவசாயிகள் மற்றும் தொழில்முனைவோருக்கான வாய்ப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஜூன் 18, 19 தேதிகளில் வேளாண் பொருட்கள் ஏற்றுமதி ஆவணங்கள் மற்றும் நடைமுறைகள் குறித...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஒரு நாள் காளான் பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக பயிர் நோயியல் துறை சார்பில் ஜூன் 5, 2026 அன்று காளான் வளர்ப்பு குறித்த ஒரு நாள் பய...

கோவை மாநகராட்சியில் நாளை மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் கா. ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் நாளை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெறு...